கோவை, மார்ச் 8 – மக்களின் ஆன்மீக உணர்வை, அரசியல் ஆதா யத்திற்காக பாஜக மதவெறுப்பாக மாற்றுகிறது என சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் குற்றம்சாட்டினார். மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.வெங்கிடுவின் 24 ஆவது ஆண்டு நினைவுதி னம் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து உடையாம்பாளையம் மாரி யம்மன் கோவில் திடலில், நடைபெற்ற மார்க் சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு விளக்க பொதுக்கூட்டத்தில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசுகையில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக 17 ஆண்டு காலம் பணியாற்றிய தோழர் ஆர்.வெங்கிடு அவர் களின் நினைவு தினத்தை இன்று கடைபிடிக் கிறோம். அவர் ஈரோடு துவங்கி கூடலூர் வரை பரவியிருந்த மார்க்சிஸ்ட் கட்சியினுடைய மாவட் டக் குழுவில் அயராது கட்சிப் பணியாற்றியவர். தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்கான போராட்டத்திலும், கட்சி அமைப்புகளை வலுவாக கட்டியமைத்ததிலும் தோழர் வெங்கிடுவின் பங்கு அசாத்தியமானது. நாடு முழுவதும் இத் தகைய தோழர்களால் உருவானதுதான் மார்க் சிஸ்ட் கட்சி. இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க தலை வர்களை எப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி நினைவு கூறும். கடந்த ஆறு மாத காலமாக, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் தொடங்கி மாநில மாநாடுகள் வரை நடைபெற்றுள்ளன. தற் போது கேரளா மாநில மாநாடு கம்பீரமாக நடந்து வருகிறது. இந்த மாநாடுகளில் கட்சியின் அமைப்பு செயல்பாடுகள் குறித்து அறிக்கை முன்வைத் தும், நடைபெற்ற வேலைகள் குறித்தும் எதிர் கால திட்டங்கள் குறித்தும் விவாதங்கள் நடை பெற்றுள்ளன. இத்தகைய விரிவான ஜனநாயக ஏற் பாடு வேறு எந்த கட்சிக்கும் இல்லை. அதேபோல மதுரையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அரசியல் யுக்தியை வகுக் கின்ற மாநாட்டை எழுச்சிகரமான முறையில் நாங் கள் நடத்திட இருக்கிறோம். இந்த மாநாட்டுக் கான நிதியை சாதாரண உழைக்கும் மக்களிடம் இருந்து தான் பெறுகிறோம். மாநில முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான எளிய மக்களை சந்தித்து ஆர்வத்தோடு மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நிதி தருவதை மாநில முழுக்க எங்களால் பார்க்க முடிகிறது. உழைக்கும் வர்க்கத் தின் உரிமைகளுக்காக நடக்கும் போராட்டத் திற்கு கொடுக்கிற உற்சாகம் என்று மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இதற்கு நேர் மாறாக பாஜக முதலாளி களிடமிருந்து நிதி சேர்க்கிறது. பத்தாண்டுகளில் இந்தியாவில் விவசாயத்தை சீர்குலைத்து இருக் கிறார்கள். நாடு முழுவதும் விவசாயிகள் தற் கொலை செய்து மடிகின்ற காட்சியை காண முடி கிறது. விவசாயிகளுடைய விளைபொருளுக்கு நியாயமான விலையை உத்தரவாதம் செய்து தராத அரசாக மோடி அரசு இருக்கிறது. உர மானியம் உள்ளிட்டு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயத்திற்கான நிதியை வெட்டி வருகிறார்கள். அதேநேரத்தில், இந்தியாவினுடைய பெரு முத லாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் என தள்ளுபடி செய்யப்படுகிறது. தமிழகம் தொடர்ந்து ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படுகிறது. இதைப்பற்றியெல்லாம் பாஜக தலைவர் வாய் திறப்பதே இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்ற திரு மணங்களுக்கு தடை போட்டு உள்ளார்கள். இன் றைக்கு தமிழ்நாட்டு மக்களின் நிம்மதியை கெடுப் பதற்கு பாஜக திட்டமிடுகிறது. பல இடங்களில் மத பதட்டத்தை உருவாக்க முயற்சி செய் கிறார்கள். மக்களின் ஆன்மீக உணர்வை, மத வெறுப்பாக மாற்றுவதற்கு திட்டமிடுகிறார்கள். இன்றைக்கு மும்மொழி என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் கேட்கிறோம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி யாக எந்த மொழி கற்றுத் தரப்படுகிறது. அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் தமிழ்நாட்டில் மொழியை திணிக்கிற வேலையை செய்கிறார் கள். தமிழ்நாட்டை பொருத்தவரை எந்த மொழி யையும் கற்றுக் கொள்வதற்கு யாரும் தடை யாக இல்லை. ஆனால் கட்டாயம் என்று சொல்லி திணிக்கும் பொழுது தான் தமிழ்நாடு எதிர்க் கிறது. தமிழ்நாட்டில் தாய்மொழி வழி கல்வி பயின்ற வர்கள் மிகச்சிறந்த மருத்துவர்கள் ஆக பொறியி யல் வல்லுனர்களாக வந்துள்ளனர். இருமொழிக் கொள்கையால் ஒருபோதும் தமிழ்நாடு பின் னடைவை சந்திக்கவில்லை. அதேபோல இவர் கள் கொண்டு வர முயற்சிக்கிற புதிய கல்விக் கொள்கை மிகவும் பிற்போக்குத்தனமானது. நல்ல வேலையாக தமிழ்நாடு அரசு அதை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லி உள்ளது. காலந்தோறும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதி ராகவே பாஜக சிந்திக்கிறது. இப்படிப்பட்ட கட்சியை தமிழ்நாட்டில் தனிமை படுத்துகிற வேலையை செய்வதற்கு பதிலாக மீண்டும் பாஜக வோடு உறவு கொள்வதற்கு அதிமுக முயற்சி செய்து வருகிறது என்று செய்திகள் வருகிறது. பாஜக வோடு சேர்த்து அதிமுகவையும் தமிழ் நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும். அந்த வகையில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிற அகில இந்திய மாநாட்டு பேரணி, பொதுக்கூட்டத்தில் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டு வெற்றி கரமானதாக்கி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.