உடுமலை, மார்ச். 30- உலகத்திலேயே ஊழலை சட்டப்பூர்வமாக செய்த ஒரே கட்சி பாஜகதான் என தேர்தல் பத்திர விவகாரத்தில் அம்பலப்பட்டு போன பாஜகவை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி., சாடினார். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி யின் திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, பொள்ளாச்சி, பெரி யநெகமம், உடுமலை மடத்துக்கு ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் திமுக துணை பொதுச் செய லாளர் கனிமொழி எம்பி., ஈஸ்வர சாமியை ஆதரித்து வாக்கு சேக ரித்து உரையாற்றினார். அப்போது கனிமொழி எம்பி., பேசுகையில், உலகத்திலேயே அரசு நிறுவனமான அமலாக்கத் துறை, தேசிய புலணாய்வுத்துறை மற்றும் வருமான வரித்துறை களை பயன்படுத்தி நிறுவனங் களை மிரட்டி தேர்தல் பத்திரம் வாயிலாக சட்ட பூர்வமாக ஊழல் செய்து வரும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. இங்கே கூடி வரவேற்கும் கூட்டத்தை பார்த்தாலே தெரிகி றது, நமது வேட்பாளர் ஈஸ்வரசாமி யின் வெற்றி உறுதி என்பது. கொரோனா காலத்தில் தளபதி யின் ஆணைக்கிணங்க, பல்வேறு உதவிகளை மக்களுக்காக செய் தவர், உங்களின் கூப்பிட்ட குர லுக்கு ஓடோடி வந்து, உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருபவர்.
எதிர் கட்சிகள் பொய்பிரச்சா ரம் செய்யும் அதில் ஒன்றுதான், அருகில் இருக்கும் மாவட்டத்திற்கு ஆழியாறிலிருந்து குடிநீர் திட்டம் கொண்டு செல்ல முயற்சிப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் அந்த பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்கு தளபதியின் அரசு ரூ. 600 கோடியில் காவிரியில் இருந்து பதிய கூட்டு திட்டம் செயல்படுத்தும் பணி நடைபெறுகிறது. மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தவும், கூடுதல் ரயில்கள் நின்று செல்லவும், மின் மாயனம் உள்ளிட்ட கோரிக்கை களை தேர்தலில் வெற்றிபெற்றவு டன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தேர்தல் உண்மைக்கும், பொய்மைக்கு மான தேர்தல், கார்பரேட்டுக்கு ஆதரவானவர்களுக்கும், சாமா னிய மக்களுக்கு ஆதாரவானவர்க ளுக்குமான தேர்தல், பாஜக பெண்களுக்கு துரோகம் இழைக் கும் அரசு, இதற்கு சாட்சியாக அந்த கட்சியில் உயர் பதவில் இருக் கும் 44 நபர்கள் மீது பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் ரீதியான குற்றாச்சாட்டு உள்ளது. இருந்தபோதும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் பாஜக எடுக்கவில்லை. மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்பத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டி போராட் டம் நடத்தினர். தேசத்திற்கு பதக்கங்களை வாங்கி பெருமை சேர்த்த வீராங்கனைகளின் போராட்டத்தை கண்டுகொள்ள வில்லை என்பது மட்டுமல்ல, அத்தகைய குற்றவாளிகளை பாதுகாத்து பதவி கொடுத்தது பாஜக அரசு. இவர்கள் எப்படி பெண்களை பாதுகாப்பார்கள். நூறு நாள் வேலை திட் டத்தை நடைமுறைப்படுத்திய முற்போக்கு கூட்டணி அரசில், நாம் மற்றும் கூட்டணி கட்சியின் துணையுடன் கொண்டு வந்தது. ஆனால் பாஜக அரசு அதற்காக ஒதுக்கப்படும் நிதியை படிப்படி யாக குறைத்து நூறு நாள் வேலை திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரமுயற்சி செய்து வருகிறது. நமது இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் வேலை நாட் களை 150 நாட்களாக உயர்த்தி, நாளொன்றிற்கு ரூ.400 வழங்கப்ப டும். மேலும் நமது கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடி மையங்கள் அனைத்தும் அகற்றப்படும், விவ சாய கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுமைமாக ரத்து செய்யப்படும், விவசாயி கள் ஆதாய விலை கேட்டு போராட் டம் நடத்தி வரும் நிலையில், இது வரை மோடி அரசு எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் கார்பரேட் நிறுவனங்க ளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, மக்களுக்கான ஆட்சி வர வேண்டும்,
உலகத்திலேயே சட்ட பூர்வமாக ஊழல் செய்து வரும் ஒரே கட்சி பிஜேபி மட் டுமே ஏனெனில் தேர்தல் பத்தி ரம் வாயிலாக கட்சிக்கு நிதி திரட்டி யுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை நிலை பெற வேண்டும் என்றால் நமது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் தற்பொழுது வரை பழமையான 1330 கோவில்களை புணர அமைத்து குடமுழக்கு நடை பெற்று உள்ளது மேலும் சுமார் 13 ஆயிரம் கோவில்களில் தினமும் பூஜை நடைபெற நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. கோலில் நிலங்ககளை ஆக்கிரப்புகளில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக் கம் நிறைவேற, மோடி அரசை அகற்ற வேண்டும் என்றார். முன்னதாக மடத்துக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் கயல் விழி செல்வராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகி ருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலூகா செயலாளர் ஆர்.வி.வடி வேல், தாலூகா குழு உறுப்பினர் கள் எம்.எம்.விரப்பன், பன்னீர் செல்வம், ராஜரத்தினம், காங்கிரஸ் கட்சியின் ராஜேஸ்கண்ணா, மதிமுக கட்சியின் ஈஸ்வரன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் ஈஸ் வரன், டில்லிபாபு உள்ளிட்ட ஆயிரக்கணக்காண பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.