அவிநாசி, ஆக.8– அவிநாசி அருகே கருவலூரில் மேல்நிலைத் தொட்டி கட்ட உள்நோக் கத்துடன் எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகியை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அவர் அடிபணிந்து அங் கிருந்து விலகிச் சென்றார். அவிநாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தரையர் காலனி அருகே, கோவில்பாளையம் செல்லும் சாலையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டிருந்தது. பழுத டைந்த இந்த மேல்நிலைத் தொட் டியை அப்புறப்படுத்தி விட்டு, அதே இடத்தில் புதிய மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கு ஊராட்சிமன்ற உறுப்பி னர்கள் ஒப்புதலோடு ஊராட்சியில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிதாக மேல் நிலைத் தொட்டி அமைப்பதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜை யும் நடைபெற்றது. மேல்நிலைத் தொட்டி அமைக்கும் இடத்திற்கு அரு கில் பாஜகவை சேர்ந்த ஆறாவது வார்டு உறுப்பினர் வாணி மகேஸ்வரி கபில்தேவ் இல்லம் இருக்கிறது. ஊராட்சித் தீர்மான அடிப்படையில் பழைய மேல்நிலைத் தொட்டியை அப்புறப்படுத்தும் பணியும் சில நாட்க ளுக்கு முன்பு முடிந்தது. இந்நிலையில், அந்த இடத்தில் மேல்நிலைத் தொட்டி கட்டக்கூடாது என்று பாஜகவை சேர்ந்த ஆறாவது வார்டு உறுப்பினரின் கணவர் கபில் தேவ் திடீரென எதிர்ப்பு தெரிவித் தார். அதேபோல கருவலூர் ஊராட்சி மன்ற கூட்டத்திலும் வார்டு உறுப்பி னரான அவரது மனைவி வாணி மகேஸ்வரி எதிர்ப்புத் தெரிவித்துள் ளார். ஆனால் இதற்கு முன்னதாக நடைபெற்ற ஊராட்சிமன்றக் கூட் டத்தில், மேல்நிலைத் தொட்டி கட்ட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதற்கு ஆதரவு தெரி வித்தும் இவரே கையொப்பமிட் டுள்ளார். இந்த நிலையில் திடீரென்று மேல் நிலைத் தொட்டி கட்டும் இடத்தில் பணி செய்ய விடாமல் கபில்தேவ் ஒரு வர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். இது மக்களிடம் அதிருப்தியை ஏற்ப டுத்தியது. அவிநாசி காவல் அதி காரி கண்ணன், சம்பவ இடத்திற்கு வந்து பாஜக நிர்வாகி கபிலுடன் பேச் சுவார்த்தை நடத்தினார்.
இதனை அறிந்த முத்தரையர் காலனி, சிஎஸ்ஐ காலனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதி மக்கள், அதே இடத்தில்தான் மேல்நிலைத் தொட்டி கட்ட வேண் டும், இல்லாவிட்டால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். என பாஜக நிர்வாகி கபிலிடம் உறுதிபடக் கூறி அவருக்கு கடும் எதிர்ப்புத் தெரி வித்தனர். இதில் அங்குள்ள காலனியை சேர்ந்த பொதுமக்கள் மேல்நிலைத் தொட்டி பிரச்சனையில் ஜாதி பிரச்ச னையை கிளப்பி விட்டு அரசியல் செய்யாதீர்கள் என பாஜக நிர்வா கியைக் கடுமையாக சாடினர். அதே போல மேல்நிலைத் தொட்டி கட்டா விட்டால் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். இதில் அவிநாசி காவல் அதிகாரி கண்ணன் பாஜக நிர்வாகி கபிலிடம், பணி செய்வதை தடுக்காதீர், உங் கள் கோரிக்கையை மனுவாக தெரி விக்கவும் இல்லாவிட்டால் நீதிமன் றத்தை நாடவும் என கூறினார். இதனைத் தொடர்ந்து கபில் அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றார். அதேபோல பொதுமக்களிடம், பணிகள் தடைபடாமல் நடக்கும் என காவல் அதிகாரி கண்ணன் தெரிவித் ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஊராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் உள் நோக்கத்துடன் அவர் எதிர்ப்புத் தெரி விப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர். மேல்நிலைத் தொட்டி கட்டுவதில் மீண்டும் குழப்பம் விளைவித்தால் சாலை மறியல் செய்யும் நிலை ஏற் படும் என்று மக்கள் எச்சரிக்கை விடுத் தனர்.