ஈரோடு, மார்ச் 29- பெண்களுக்கு எதிராக பாலி யல் வன் கொடுமையில் ஈடுபட்ட 44 எம்பிக்களை பாஜக பாதுகாக்கி றது என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி., குற்றம் சாட்டினார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதி யில் போட்டியிடும் இந்தியா கூட்ட ணியின் திமுக வேட்பாளர் கே.இ. பிரகாஷை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த தேர்தல் நாட் டையும், எதிர்கால சந்ததியையும் காக்கும் தேர்தல். பாஜகவை வீட் டுக்கு அனுப்பிவிட்டு, ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். பாஜகவை எதிர்த்து பேசினால், கேள்வி கேட்டால் அவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மூலம் சோதனை, வழக்கு என மிரட்டு வார்கள். இந்த அமைப்புகளும், எதிர் கட்சியினர் மீது மட்டுமே வழக்கு தொடுக்கும். பாஜக வில், 44 எம்பிக்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புரிந்த வழக்குகள் உள்ளது. மிக கேவலமான குற்றங் களை செய்த பாஜக எம்பிக்களை அக்கட்சி பாதுகாக்கிறது. மணிப்பூ ரில் மோசமாக பெண்கள் நடத்தப் பட்டார்கள். 7 வாரங்கள் இணைய சேவையை துண்டித்துவிட்டு, எங்கு என்னென்ன நடந்தது என்பதை வெளி உலகுக்கு தெரி யவிடாமல் செய்தனர். வெளிநாடு களுக்கு சுற்றுலா செல்லும் மோடி, மணிப்பூருக்கு செல்ல வில்லை. தமிழகத்தில் மழை, வெள் ளம் பாதித்த போது, இங்கு வர வில்லை. ஆனால், தேர்தல் வந்தவு டன் தமிழகத்தை சுற்றிச்சுற்றி வரு கிறார். தமிழகத்தில் மோடி வீடு வாங்கி குடி வந்தாலும், அவர்க ளால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. கரூரில் போட்டி போட முடியா மல் தற்போது ஒருவர், கோவை தொகுதிக்கு சென்றுள்ளார். மக் கள் தெளிவாக உள்ளனர். பெரும் பான்மை மக்களை பாதுகாக்கி றோம். கோவில்களை பாதுகாக்கி றோம் எனக்கூறி, கோவில்களை யும், கோவில் சொத்துக்களை யும் தங்களிடம் தர வேண்டும் என் கின்றனர். அவர்களிடம் கோவிலை யும், சொத்துக்களையும் கொடுத் தால் என்னாகும் என மக்கள் அறி வார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி யில் கோவிலும், கோவில் சொத்துக் களும் பாதுகாக்கப்பட்டு வருகி றது. ‘தமிழக மழை, வெள்ள பாதிப் புக்கு நிவாரணம் தருவதாக’ உறுதி யளித்த மோடி, இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. தமிழகத் தில் இருந்து வரியாக, 1 ரூபாயை பெற்று கொண்டு, 29 பைசா மட்டுமே நமக்கு திரும்ப வழங்குகின்றனர். நமது வரிப்பணத்தை பெற்று கொண்டு, நமக்கு நிவாரண உதவி செய்ய மறுக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வரும் முன் ஏரிவாயுவின் விலை 410 ரூபாயாக இருந்தது. தற்போது, 1,100 ரூபாய்க்கு விற்கிறது. மகளிர் தினத்தையொட்டி 100 ரூபாய் குறைத்துள்ளாராம். ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்போது, ஏரிவாயுவின் விலை, 500 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல், 75 ரூபாய்க் கும், ஒரு லிட்டர் டீசல் 65 ரூபாய்க் கும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள் ளார்.
இதேபோன்று, கேன்சர் நோய்க்கு சிகிச்சை வழங்கும் வகையில், ஈரோட்டில் மருத்துவம னையும், ஆராய்ச்சி மையமும் அமைக்கப்படும் என தமிழக முதல் வர் அறிவித்துள்ளார். அவற்றை செயல்படுத்த, ‘இந்தியா’ கூட்ட ணிக்கு வாக்களியுங்கள் என்றார். இந்நிகழ்வில் வேட்பாளர் கே.இ.பிரகாஷ், அமைச்சர் சு.முத் துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.பழனிசாமி, எஸ்.முத்து சாமி, ஆர்.கோமதி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன், கொடு முடி-மொடக்குறிச்சி தாலுக்கா செயலாளர் கே.பி.கனகவேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிக ளும், செயல்வீரர்களும், ஏராள மான பெண்களும் இதில் பங்கேற்ற னர். பொய் சொல்வதில் அண்ணாமலை பிஎச்டி இதேபோன்று, கோவை நாடா ளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கனிமொழி எம்பி., துடியலூர், சிங்காநல்லூர் மற்றும் சூலூர் ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். இங்கு அவர் பேசுகையில், பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகியோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சிம்ம சொப்பனமாக உச்சி சூரியனாக தகித்துக் கொண் டிருக்கிறார். அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகங்களை படித்துள்ள தாக கூறுகிறார், 5 வயதில் இருந்து தினமும் 2 புத்தகங்கள் படித்தால் கூட இதுநாள் வரை 20,000 புத்த கங்கள் படித்திருக்க முடியாது, அண்ணாமலை பொய் சொல்வ தில் வளர்ச்சி அடைந்து பிஎச்டி பட்டம் பெற்று விட்டார். தமிழகத் தைப் பொறுத்தவரை திமுகவுக் கும் அதிமுகவுக்கும் தான் போட்டி. தற்போது கடும் வெயில் நிலவுகி றது இதற்கு காரணம் ஒன்றிய அரசு அந்தமான் நிக்கோபார் தீவுக ளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி கப்பல்படை தளம் அமைக்கின்றனர். சுற்றுப்புற சூழல் மற்றும் கிளைமேட் சேஞ்ச் ஆகியவற்றிற்கு காரணம் பாஜக தான் என்பது இதன் மூலம் தெளிவா கிறது. ஒன்றிய பாஜக அரசு விவசா யிகளுக்கு எதிராக சட்டங்களை நிறைவேற்றி விவசாயிகளை வஞ்சிக்கிறது, கல்விக்கடனை ரத்து செய்ய மறுக்கிறது. ஆனால் கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயி ரம் கோடி ரூபாய் கடனை ரத்து செய் கிறார்கள். இந்தியாவில் 2 மாநில முதல்வர்கள் தற்போது சிறையில் உள்ளனர். மிரட்டியே பணிய வைக்க முயற்சிக்கிறது பாஜக. பாஜக மக்கள் விரோத சட்டங் களை நிறைவேற்றினால் அதற்கு துணை போனது அதிமுக. சாமா னிய மக்களின் பிள்ளைகள் படிக் கக் கூடாது என நுழைவுத் தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள். கோவை நாடாளுமன்ற தொகுதி யில் திமுக சார்பில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாருக்கு வாக்க ளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். ஈரோடு, கோவை மாவட்டங்க ளில் கனிமொழி எம்பி.,யின் பிரச் சாரத்தில், இந்தியா கூட்டணி கட்சி களின் தலைவர்கள் உள்ளிட்டு பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.