ஈரோடு, ஏப்.15- பாஜகவின் தேர்தல் வாக் குறுதி தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத் தாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி யுள்ளார். இந்தியா கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற தொகு தியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து வாக்கு சேகரிக்க மதிமுக பொது செயலாளர் வைகோ ஈரோடு வந்தார். அப்போது பெரியார் நகரில் இருக்கும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தா ருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தமிழகத் தில் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. இந்தி யாவில் எந்த மாநிலத்திற்கும் மோடி இப்படி போகவில்லை. வெள்ளம் வந்த போது, கொரோனா வந்த போது, தமிழ்நாட் டிற்கு வராதவர், இப்போது மட்டும் ஏன்? வருகிறார். இந்தியா கூட்டணி 40க்கு 40 வெல்வது உறுதி. பாஜகவின் தேர்தல் வாக் குறுதி தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது, என்றார்.