districts

img

செஸ் ஒலிம்பியாட் குறித்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

தருமபுரி, ஜூலை 19- இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் “நம்ம செஸ் நம்ம பெருமை” குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி செவ்வாயன்று நடைபெற்றது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44  ஆவது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில்  ஜூலை  28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள், செஸ் போர்டு  மாதிரி பதாகைகளுடன் “நம்ம செஸ் நம்ம பெருமை” குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் செஸ் ஒலிம்பியாட் சின்னம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து பங்கேற்ற மாபெரும் விழிப் புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங் கிய இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக ஒட்டப்பட்டி வரையிலும், மீண்டும் ஒட்டப்பட்டியிலிருந்து மறு மார்க்கமாக தருமபுரி அரசு கலைக்கல்லூரி, மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகம் வழியாக இலக்கியம்பட்டியில் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளை ஞர் நலன் அலுவலர் தே.சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வா ளர் ஜெ.முத்துக்குமார், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வி உட்பட ஆசிரி யர்கள், மாணவர்கள்  என ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.