districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு

கோபி, ஜூலை 19- பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து  உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும்  பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ள ளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணை யின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவில் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரிப்பின் கார ணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதி களில் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரு கிறது. வெள்ளியன்று நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 11761 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 81 அடியாகவும், நீர் இருப்பு 15டிஎம்சி ஆகவும் இருந்தது. இதில், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானிஆறு மற்றும்  கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1205 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணை யின் நீர்மட்டம் கடந்த 4நாட்களில் 11அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வருமான வரித்துறையினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை 19- அரசு பணிகளை தனியாருக்கு விடுவதை எதிர்த்து வரு மான வரித்துறையினர் ஈரோடு, பெரியார்நகரில் உள்ள வரு மான வரி அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

8ஆவது ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட 18 மாத பஞ்சப்படியை உடனே வழங்க வேண் டும். கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்குவ தில் 5 சதவிகிதம் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அஞ்சல் தொழிற்சங்கம் மற்றும் இஸ்ரோ ஊழியர் சங்க அங்கீகாரத்தை மீண்டும் வழங்க வேண்டும். கேசுவல், கான்டிராக்ட் மற்றும் ஜிடிஎஸ் ஊழியர்களை இலாக்கா ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருமான வரி இலாக்கா அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் சங்கத் தலைவர் பிருதிவிராஜ் தலைமை ஏற்றார். வருமான வரி ஊழியர் சம்மேளனச் செய லர் மேபிள் கோரிக்கை விளக்க உரையாற்றினர். மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் என்.ராம சாமி வாழ்த்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான வருமான வரி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திடுக மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 19- பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முடக்கப்பட்ட 18 மாத டிஏ நிலுவையை உடனடியாக  வழங்க வேண்டும். 8 ஆவது சம்பளக்குழுவை அமைக்க வேண் டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன்  திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் சம்மேள னம் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தபால் ஊழியர்கள் சங்க மாவட்டத் தலை வர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.பி.நாராயணன், மத்திய அரசு பொதுத்துறை ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் நேதாஜி சுபாஷ், ஓய்வுபெற்றோர் சங்க  மாநில நிர்வாகி கே.ஆர்.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேகோரிக்கைகளை வலியுறுத்தி வருமான வரித்துறை அலுவலகம், சூரமங்கலம் தலைமை தபால் நிலை யம் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி: இன்று மின்தடை

தருமபுரி, ஜூலை 19- தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, மாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் சனியன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மாம் பட்டி, செல்லம்பட்டி, அனுமன்தீர்த்தம், கீழானூர், வேப்பம் பட்டி, கைலாயபுரம், காட்டேரி, தீர்த்தமலை, சட்டையம்பட்டி, மேல்செங்கப்பாடி, சந்திராபுரம், டி.அம்மாபேட்டை, கொங்கவேம்பு, மாம்பாடி, கீழ்மொரப்பூர், மாவேரிப்பட்டி, பறையப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, நரிப்பள்ளி, சிக்களூர், தாமலேரிப்பட்டி, பெரியப்பட்டி, கணபதிப்பட்டி, செக்காம் பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, கீரைப்பட்டி, சிட்லிங், வேலனூர், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, பாப்பிரெட்டிப் பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், பையர்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்டுசாலை, காளிப் பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, இரு ளப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சனியன்று காலை 9  முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் கே.முத்துசாமி தெரி வித்துள்ளார்.

சேலம் சிறையில் டிஐஜி திடீர் ஆய்வு

சேலம், ஜூலை 19- சேலம் சிறையில் கோவை டிஐஜி சண்முகசுந்தரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மத்திய சிறையில், கோவை சரக காவல் துறை  துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வியாழனன்று திடீர்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடந்த சில நாட்களுக்கு  முன்பு, மத்திய சிறையில் இருந்து விவசாயப் பணிக்கு அழைத்துச் சென்ற கைதிகள், சிறையின் பின்பகுதியில் கறி சமைத்து சாப்பிட்டது தொடர்பாக அவர் விசாரணை நடத்தி னார். மேலும், கைதிகளை அழைத்துச் சென்ற வார்டன்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் கேட்ட றிந்தார். இதன்பின் பெண்கள் சிறைக்கு சென்ற அவர், அங்கி ருக்கும் கைதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப் போது, வழக்குரைஞர் யாரும் இல்லாத கைதிகளுக்கு, இலவ சமாக வழக்குரைஞரை ஏற்பாடு செய்து கொடுக்க நடவ டிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கைதிகளின் கோரிக்கை, சிறை செயல்பாடுகள் குறித்து சிறைக் கண்காணிப்பாளர் வினோத்துக்கு சில ஆலோசனைகளையும் அவர் வழங்கி னார்.

அணைகள் நிலவரம் (வெள்ளிக்கிழமை)

பவானிசாகர் அணை
நீர்மட்டம்:80.32/105அடி
நீர்வரத்து:14816கனஅடி
நீர்திறப்பு:1205கனஅடி
மேட்டூர் அணை
நீர்மட்டம்:55.120/120அடி
நீர்வரத்து:40018கனஅடி
நீர்திறப்பு:1000 கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:32.70/72அடி
நீர்வரத்து:3039கனஅடி
நீர்திறப்பு:57கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:161/160அடி
நீர்வரத்து:7594கனஅடி
நீர்திறப்பு:1087கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:106/120அடி
நீர்வரத்து:3709கனஅடி
நீர்திறப்பு:84கனஅடி
மழையளவு:1.5 மீமி
திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:28.32/60அடி 
நீர்வரத்து:23கனஅடி
நீர்திறப்பு:28கனனஅடி
மழையளவு: 8 மீமி
அமராவதி அணை
நீர்மட்டம்:87.64/90அடி
நீர்வரத்து:6004கனஅடி
நீர்திறப்பு:1478கனஅடி

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சேலம், ஜூலை 19- சேலம் ரோட்டரி கிளப் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சேலம் ரோட்டரி கிளப் மற்றும் ஜெனிஸ் அகாடமி சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சேலம் மாநகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் வெள் ளியன்று நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் கரோலின் எபி தலைமை வகித்தார். சாலை விதிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது,  சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது. மேலும், நலிவுற்ற மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்லூரி கல்வி கட்டணம் வழங்கப்பட்டது.