ஈரோடு, நவ.28- பீடித் தொழிலில் இருந்து வசூ லிக்கப்படும் 28 சதவிகிதம் ஜிஎஸ்டி தொகையில் இருந்து பீடித் தொழி லாளர் சேம நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, பீடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலி யுறுத்தி ஈரோட்டில் வியானன்று சிஐ டியு பீடி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பீடித் தொழிலில் இருந்து வசூ லிக்கப்படும் ஜிஎஸ்டி தொகையில் இருந்து பீடித் தொழிலாளர் சேம நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப் பட வேண்டும். அனைத்து பீடித் தொழிலாளர்களுக்கும் அடை யாள அட்டை வழங்கப்பட வேண் டும். பீடித் தொழிலாளர்கள் பிள்ளை களுக்கான உதவித்தொகை மற்ற சமூக அடிப்படையிலான உதவித் தொகையுடன் ஒப்பிடும்போது அனைத்து நிலைகளிலும் போது மான அளவு உயர்த்தப்பட வேண் டும். வீட்டுகட்ட மானியத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண் டும். நிலுவைத்தொகையை கால தாமதமின்றி உடனடியாக வழங் கப்பட வேண்டும். மருத்துவமனை கள் மற்றும் மருந்தகங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு வழங்கப்ப டும் அனைத்து வகையான மருத் துவ சேவைகளும், இ.எஸ்.ஐ. வசதி களை தொடங்காத வரை, பர வலாக்கப்பட்ட உள்கட்டமைப்பு, மருத்துவர்கள், மருந்துகள் போன்றவற்றை முறையாக தொடர வேண்டும். அனைவரையும் பி.எப். திட்டத்தில் சேர்க்க வேண்டும். 58 வயது தொழிலாளருக்கு ஓய்வூதி யம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு பீடி தொழிலாளர்கள் சங்கத்தி னர் மாநிலம் முழுவதும் வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே சிஐடியு பீடி தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அச்சங்கத் தலைவர் சித்தாரா பேகம் தலைமை வகித்தார். சிஐ டியு மாநில துணைப் பொதுச் செய லாளரும், பீடி சம்மேளன பொதுச் செயலாளருமான க.திருச்செல் வன் சிறப்புரையாற்றினார். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் கே.பாண்டியன், சங்க பொதுச் செயலாளர் ஆர்.செந்தில் குமார், பொருளாளர் பி.ஷாஜாதி, துணைத் தலைவர் எஸ்.கைபானி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பீடித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சங்கத்தின் பொதுச் செயலாளர் க.திருச்செல்வன் பேசு கையில், நமது நாட்டில் 80 லட்சத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பீடித்தொழிலை நம்பியுள்ள னர். பீடித்தொழில் படிப்படியாக டிப்போ, அவுட்ஒர்க் காண்ட்ராக்ட், சப் காண்ட்ராக்ட், மூட்டை வேலை என வேலைத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. பீடி சுற்றுபவருக்கும் பீடி கம்பெனிக்குமான உறவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சட்டப்படியான கூலி, சட்டப்படி யான பணப்பயன் மறுக்கப்பட்டு. உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி வருகிறார்கள். ஒன்றிய மோடி அரசு பீடி தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்துவதற்கு மாறாக, அந்த சட்டத்தை நீர்த்து போகும் வகை யில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்கிறது. தொழி லாளர்களை சட்ட பாதுகாப்பிலி ருந்து வெளியேற்றியுள்ளது. தமிழ் நாட்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். முத் தரப்பு ஒப்பந்தப்படியான கூலி உயர்வை கூட பீடி கம்பெனிகள் தர மறுக்கின்றன. பஞ்சப்படி, லீவு சம்பளம், பணிக் கொடை, போனஸ் உள்ளிட்ட சட்டப்படியான பணப் பயன்களை தராமல் ஏமாற்று கின்றன. தமிழ்நாட்டு தொழிலாளர் துறை பீடி சட்டம் அமலாவதை கண்காணிக்கும் கடமையை முறை யாக செய்வதில்லை. வாரத்திற்கு 6 நாள் வேலை, வேலையில்லா நாட்களுக்கு லேஆப் சம்பளம் என்பதை கூட அமல்படுத்த வில்லை. எனவே, பீடித்தொழிலா ளர்களின் வாழ்வாதார கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும். என் றார்.