districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மருத்துவ காப்பீட்டில் குளறுபடி

கோவை, செப்.28- மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்திட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அன்னூர் வட்டக்கிளை வலியுறுத்தியுள்ளது.  அன்னூரில், வட்டக்கிளை பேரவை பி.முருகேசன் தலை மையில் நடைபெற்றது. இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட  நிர்வாகி டெய்சி ராணி துவக்கவரையாற்றினார்.  மு.சிவக் குமார் அறிக்கை சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்னதாக, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறு படிகளை களைய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை  நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  இதில், அன்னூர் வட்டக்கிளைத் தலைவ ராக பி.முருகேசன், செயலாளராக மு.சிவக்குமார், பொரு ளாளராக கே.சிவக்குமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப் பட்டனர். 

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பிலான படுக்கை விரிப்புகள்

நாமக்கல், செப்.28- குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சுமார் ரூ.80  ஆயிரம் மதிப்பிலான நோயாளிகளுக்கான படுக்கை விரிப்பு கள் வழங்கப்பட்டது.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவ மனையின் தரம் உயர்த்தப்பட்டு அதற்கான பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், குமார பாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  பாரதி விஜயகுமார் மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு படுக்கைக்கு தேவையான படுக்கை விரிப்புகள் வேண்டி குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணியிடம் கோரிக்கை விடுத்தார். இதனையேற்று, குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் உள் நோயாளிகள் படுக்கைகளுக்கு தேவை யான ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 100 படுக்கை விரிப்பு களை மருத்துவமனை உபயோகத்திற்காக சொந்த நிதியில்  இருந்து பி.தங்கமணி எம்எல்ஏ வழங்கினார். நிகழ்வில் தலைமை மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

குறைந்த விலையில் பிரியாணி

கோவை, செப்.28- மிலாடி நபியை முன்னிட்டு, கோவையில் குறைந்த விலை யில் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது.  முகமது நபியின் பிறந்த தினத்தை மிலாடி நபி விழாவாக  உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம்,  கோட்டைமேடு, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், குறைந்த விலையில் பிரியாணி விநியோகம் நடைபெற்றது. இப்பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் மிலாடி நபி யையொட்டி குறைந்த விலையில்  பிரியாணி விநியோகம் செய்வதற்காக பிரியாணி தயாரிக்கும் பணிகள் புதனன்று இரவு முதல் நடைபெற்றது. இதில், பள்ளிவாசல் அருகில் உள்ள இடத்தில்  60 பிரம்மாண்ட அண்டாக்களில், 3000 கிலோ  அரிசி, 3000 கிலோ ஆட்டிறைச்சியை  கொண்டு மட்டன் பிரி யாணி தயாரிக்கப்பட்டது. பின்னர், வியாழனன்று காலை முதல் வியாபார நோக்கமின்றி ஒரு இந்த பிரியாணியை 15  ஆயிரம்  பேர் சாப்பிடும் வகையில் தயாரிக்கப்பட்டது. பிற் பகலில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக பிரியாணி விநியோகிக்கப்பட்டது. 135 ஆண்டுகள் பழமையான கோட்டைமேடு பள்ளி வாசலில் 70 வருடங்களாக பிரியாணி தயாரிக்கப்படுவதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நுகர்வோர் நீதிமன்றத்தில் சமரச தீர்வு

நாமக்கல், செப்.28- நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில், 10 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப் பட்டது. இதில், ரூ1லட்சத்து 12 ஆயிரத்தை  இழப்பீடாக வழங்க சமரச தீர்வு காணப் பட்டது.  நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம்  தனியார் உணவகத்தில் பரோட்டா சாப்பிட்ட  சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதே போன்று, அசைவ உணவகத்தில் சாப்பிட்ட பள்ளி சிறுமி  ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு  அசைவ உணவகத்தில்   சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.  இனிப்பு மற்றும் கார உணவு பண்ட  பொட் டலங்களில் உற்பத்தி தேதி, காலாவதியாகும்   தேதி  உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற் பனை செய்ததாக நாமக்கல்,   திருச்சி, கோயம் புத்தூர் மாவட்டங்களில் உள்ள கடை களின் மீது நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத் தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த  வழக்குகள் உட்பட 53 வழக்குகளில் நாமக்கல்  மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஏ.எஸ்.ரத்தினசாமி முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை  செய்யும் ஆறு கடைகள், திருச்சி மாவட்டத் தில் உள்ள இரண்டு கடைகள், கோவை யில் உள்ள ஒரு கடை உரிமையாளர் உள்ளிட் டோர் சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்று, பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு ரூ.1  லட்சம்  இழப்பீடு  செலுத்தினர். இதன் மூலம்  ஒரே நாளில் 10 வழக்குகளில் நாமக்கல்   நுகர் வோர் நீதிமன்றத்தில் சமரச தீர்வு ஏற்பட் டுள்ளது.   இதேபோன்று, நாமக்கல்லில் உள்ள மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், வாங்கப்பட்ட பொருட் களுக்குண்டான ரசீதில், பொருட்கள்  திரும்ப வாங்கப்பட மாட்டாது  என அச்சிடப் பட்டது தவறு என வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில்  கடையின் உரிமை யாளர், நுகர்வோருக்கு ரூ10 ஆயிரம் இழப் பீடு வழங்கினர். மற்றொரு வழக்கில், நாமக்கல்லில் உள்ள   சூப்பர் மார்க்கெட் வாடிக்கையாளரிடம் நெகிழிக்கு ரூ.10 வசூ லித்தது தவறு என  தொடரப்பட்ட வழக்கில்  அந்த நிறுவனம், நுகர்வோருக்கு இழப் பீடாக ரூ.2 ஆயிரம் செலுத்தியது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கு கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்த முடிவு

நாமக்கல், செப்.28- பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, கறவை மாடுகளுடன் போராட்டம்  நடத்துவது எனவும், இதில் திரளானோரை பங்கேற்க வைப்பது என பால் உற்பத்தி யாளர் சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டக் குழு கூட்டம் நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு சிபிஎம் அலுவலகத்தில் நடை பெற்றது. இச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்து சாமி தலைமை ஏற்றார். இதில், பால் கொள் முதல் விலை உயர்த்தி தரவேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழக முழுவதும் அக்டோபர் 17,18,19  ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு கறவை மாடுகளுடன் ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது.  இதன் ஒரு பகுதியாக, நாமக்கல்லில் அக்டோபர் 19ஆம் தேதியன்று ஆவின் அலுவ லகம் முன்பு கறவை மாடுகளுடன் திரளான விவசாயிகளை பங்கேற்க வைப்பது, என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் பி.பெருமாள் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

கிராமங்களில் குடிநீர் பிரச்சனை: ஆழ்குழாய்களை சீரமைக்க கோரிக்கை

உடுமலை, செப்.28- கிராமங்களில்  குடிநீர் பிரச்சனை அதிக மாக உள்ளதை தீர்க்கும் வகையில், ஏற்க னவே பயன்பாட்டில் இருந்து தற்பொழுது பயன்படுத்தாமல் இருக்கும் ஆழ்குழாய் கிண றுகளைச் சரிசெய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிக ளில்  கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு  வருகிறது.  கடந்த மாதம் முதல் தினம் ஒரு பகு தியில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வரு கிறார்கள். ஊராட்சி நிர்வாகத்தால் பொது மக் களுக்கு தேவையான தண்ணீர் தர முடிய வில்லை. இதற்கு முக்கிய காரணமாக இருப் பது திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கிராமங்களுக்குக் குடி நீர் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தவு டன், அதுவரை பயன்பாட்டில் இருந்த ஆழ்கு ழாய் கிணறுகளில் இருந்து பொதுக்குழாய் களில் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டது. இத னால் பல கிராமங்களில் ஆழ்குழாய் கிண றுகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது. கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்க  முடிவதில்லை. மேலும் கடந்த பத்து ஆண்டு களுக்கு முன் இருந்த மக்கள்தொகை அடிப் படையில் தண்ணீர் விடப்படுகிறது. தற்பொ ழுது கிராமங்களில் புதிய வீட்டுமனைகள் அதி கரித்துள்ளதால் தண்ணீரின் தேவையும் அதி கரித்துள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் ஏற் கனவே பயன்பாட்டில் இருந்த ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்து குடிநீர் பிரச்ச னைக்குத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ள னர்.

காய்ந்த தென்னை மரங்கள்: நிவாரணம் வழங்கக் கோரிக்கை

உடுமலை, செப்.28 - உடுமலை பகுதிகளில் காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற நிவாரணம் தர  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பள வில் தென்னை விவசாயம்  செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் கணிசமான வருமா னத்தை பெற்று வந்த விவசாயிகள் தற்பொ ழுது பருவ மழை இல்லாமல் போனதால் தண் ணீரை விலைக்கு வாங்கும் சூழலுக்குத் தள் ளப்பட்டுள்ளனர். மேலும், விவசாய நிலங்க ளில் காய்ந்த மரங்களை  முழுமையாக அகற்ற சில ஆயிரம் ரூபாய் செலவு செய்ய  வேண்டிய நிலை உள்ளதால், அகற்றப்ப டாத தென்னை மரங்கள் உள்ளன. இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,  பருவமழை இல்லாமல் காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற சில ஆயிரம் தேவைப்படுகிறது. முன்பு செங்கல் சூளை  உரிமையாளர்கள் காய்ந்து போன மரங் களை எடுத்துச் சென்றார்கள். ஆனால் பல  புதிய தொழில் நுட்பங்கள் செங்கல் சூளைக்கு வந்ததால் மரங்களை எடுக்க யாரும் வருவது இல்லை. இதனால் காய்ந்து  போன மரங்களை எங்களால் அகற்ற முடிய வில்லை. எனவே தமிழக அரசு காய்ந்து போன  தென்னை மரங்களை அகற்ற எங்களுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என்றார் கள்.

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்

சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் வேண்டுகோள்

திருப்பூர் செப். 28 - பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும்படி சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்க ளிடம் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்  துறை அமைச்சர் சாமிநாதன்  வேண்டுகோள்  விடுத்தார். வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சியை சார்ந்த 150 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், பொன் னுசாமி திருமண மண்டபத்தில் மாவட்ட ஊரக  வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ. லட்சுமணன் தலைமையில், ஈரோடு நாடா ளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி முன் னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ்  வியாழனன்று இந்த சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் சாமிநாதன் கூறு கையில், நம் தாய்மொழி தமிழ் மொழியை பல் வேறு மொழிகள் இன்றைக்கு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக ஒரு முன்னேற்றம் அடைய வேண்டும். நம் முடைய தாய்மொழியான செந்தமிழில் பெயரை வைத்து அவர்களை தமிழ் பெயர்  கொண்டு அழைக்க கூடிய ஒரு நல்ல பழக் கத்தை தாய்மார்கள் எல்லாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கேட்டுக் கொண்டார். இவ்விழாவில் பங்கேற்ற 150 கர்ப்பிணிப்  பெண்களுக்கு சீர்வரிசையாக தட்டு, புடவை,  வளையல், பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் 5  வகை உணவுடன் மதிய உணவு வழங்கப் பட்டது. முன்னதாக, அமைச்சர் மு.பெ.சாமி நாதன் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையத்தில் இந்து சமய அறநி லையத்துறையின் சார்பில் ரூ.31.50 லட்சம்  மதிப்பீட்டில் நாட்டராயசுவாமி திருக்கோயி லில் இராஜகோபுர முகப்பு மண்டபம் கட் டும் பணியை துவக்கி வைத்தார். வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வள் ளியரச்சல் ஊராட்சி வடுகபாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங் கத்தின் சார்பில் 2 முழு நேர பொது விநி யோகத் திட்ட அங்காடிகளையும், 1 பகுதி  நேர அங்காடியையும் நடத்தி வருகிறது. இந்நி லையில் 673 குடும்ப அட்டைகளுடன் செயல் பட்டு வரும் வள்ளியரச்சல் அங்காடியிலி ருந்து 170 குடும்ப அட்டைகளைப் பிரித்து வடு கபாளையம் புதிய பகுதி நேர அங்காடி வியா ழனன்று திறக்கப்பட்டது. வாரத்தில் புதன் மற் றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களில்  செயல்பட உள்ளது. உள்ளாட்சி அமைப்புக ளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி

டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி தருமபுரி, செப்.28- டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருவ நிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் அடிக் கடி காய்ச்சல், சளி போன்ற நோய்களால் அவதிப்பட்டு வரு கின்றனர். மேலும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு அதி காரிகள் வீடு, வீடாக சென்று கொசுப்புழுக்களை அழிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்தந்த மாவட் டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்ச லால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக சிறப்பு டெங்கு காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50  படுக்கைகள் கொண்ட தனி வார்டும், மாவட்டத்திலுள்ள 4  அரசு மருத்துவமனைகளில் 60 படுகைகள் கொண்ட வார்டு களும் தயார் நிலையில் உள்ளன. இதனிடையே திருப்பத் தூர் மாவட்டம், சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணி கண்டன் (45) – சுமித்ரா (35) ஆகிய தம்பதியினருக்கு பிரித் திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி (4), புரு ஷோத்தமன் 8 மாத கைக்குழந்தை என 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத் தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, கடந்த செப்.23 ஆம் தேதியன்று திருப்பத்தூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் யோகலட்சுமி திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் இருந்து தற்போது பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அபிநிதி மற் றும் புருஷோத்தமன் ஆகிய 2 குழந்தைகளும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த செப்.26 ஆம் தேதியன்று மேல்  சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் புதனன்று இரவு அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் புருஷோத்தமன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3  குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, ஒரு பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காருடன் 5 கிலோ தங்கம் கொள்ளை

காருடன் 5 கிலோ தங்கம் கொள்ளை தருமபுரி, செப்.28- காரிமங்கலம் அருகே காருடன் ஐந்து கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரம், ராஜவீதியில் பிரசன்னா (40) என்பவர்  நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நகை கடைக்கு தேவையான 5 கிலோ எடையுள்ள புதிய நகைகளை வாங்கிக் கொண்டு கார் மூலம் பெங்களூரில் இருந்து காரில் கோவை  நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் கடை பணியா ளர்கள் விஜயகுமார் (46), சுரேஷ்குமார் (45), ஜெய்சன் (40)  ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பெரியாம்பட்டி ஆற்று மேம்பாலம் அருகே பூலாம்பட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டி ருந்தது. அப்போது  பின்னால் 2 கார்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பிரசன்னா வந்த காரை வழிமறித்து, காரின் கண்ணாடிகளை உடைத்து, ஐந்து கிலோ நகைகள் மற்றும் பிரசன்னா வந்த இடியோஸ் காரையும் கொள்ளைய டித்து சென்றனர். இதுகுறித்து காரிமங்கலம் காவல் நிலையத் தில் பிரசன்னா அளித்த புகாரின் பேரில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் ராஜேஸ் வரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்  குமார் தாகூர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் கொள்ளையர்கள் பயன் படுத்திய இரும்பு கம்பி, செல்போன் உள்ளிட்டவைகளை பறி முதல் செய்து, போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேறு துறைக்கு மாற்ற மாணவர்களிடம் பணம் பெற்ற
 அரசு கல்லூரி முதல்வர், பேராசிரியர் பணியிடை நீக்கம்

உதகை, செப்.28- தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையிலி ருந்து வேறு துறைக்கு மாற்ற மாணவர்களி டம் பணம் பெற்ற உதகை அரசு கலைக்கல் லூரி முதல்வர் மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகள், தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட துறையில் இருந்து வேறு துறைக்கு மாற கல்லூரி முதல்வர் அருள் அந் தோணி, தாவரவியல் துறை பேராசிரியர் ரவி ஆகியோர் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மாணவ, மாணவியர்கள்  முதல மைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக் குநரகம், தமிழக காவல் துறை இயக்குநர் ஆகி யோருக்கு இணையதளம் மூலம் புகார் மனு  அனுப்பினர். அதனைத்தொடர்ந்து தமிழக  உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் கல் லூரி கல்வியியல் இயக்குநர் ஆகியோர் உத்த ரவின் பேரில், கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குநர் கலைச் செல்வி, உதகை அரசு கலைக்கல்லூரிக்கு நேரில் வந்து சுமார் 30 மாணவ, மாணவிகள், 4 பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி முதல் வரிடம் விசாரணை நடத்தினார். அதுகுறித்த விசாரணை அறிக்கையை உயர் கல்வித் துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வி யியல் துறை இயக்குநருக்கு அவர் அனுப்பி வைத்தார். இதனிடையே உதகை அரசு கலைக்கல் லூரி முதல்வர் அருள் அந்தோணி, ஆதிதிரா விடர் மாணவர்கள் தங்கும் வீடுதியில் தங்கு வதற்கான பரிந்துரை கடிதம் வழங்க தலா 10  ஆயிரம் ரூபாய் பெற்றதாக மற்றொரு சர்ச்சை யும் எழுந்தது. அதுகுறித்த வீடியோ ஒன்றும் வெளியாகியது. இதுபோன்ற சர்ச்சைக்கு மேல் சர்ச்சைகள் எழுந்த நிலையில், கல் லூரி முதல்வர் அருள் அந்தோணி மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி ஆகிய 2 பேரையும் கல்லூரி கல்வி இணை இயக்கு நர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள் ளார்.