districts

img

பாசிச அரசின் கார்ப்பரேட் வரிக்கொள்கையால்

கோவை, ஜூலை 12–  பாசிச பாஜக அரசின் கார்ப்ப ரேட் வரிக்கொள்கையால் விலை வாசி கடுமையாக அதிகரித்திருப்ப தன் விளைவாக குடும்பத்திற்குள் சிக்கலும், சண்டைகளும் நடப்ப தாக மாதர் சங்கத்தின் அகில இந் திய துணை தலைவர் உ.வாசுகி குற்றஞ்சாட்டினார். எரிவாயு சிலிண்டர் விலை உயர் வின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பை எதிர் கொண்டு வருகின்றனர். ஒன்றிய  பாஜக அரசின் எரிவாயு சிலிண்டர்  விலை உயர்வை கண்டித்து அனைந் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் நாடு முழுவதும் பெரும் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவையி லும் மாதர் சங்கத்தினர் ஒன்றிய மோடி அரசை கண்டித்து தொடர் போராட்டங்களிள் ஈடுபட்டு வரு கின்றனர். பெரியநாயக்கன்பாளை யத்தில் மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் ஒன்றிய தலை வர் லதா தலைமை தாங்கினார். இதில், மாதர் சங்கத்தின் அகில இந் திய துணை தலைவர் உ.வாசுகி பங் கேற்று கண்டன உரையாற்றினார். 

அப்போது அவர் பேசுகையில், ஒன்றிய பாஜக அரசு உழைக்கும் மக்களின் நலனை மறந்து கார்ப்ப ரேட்டுகளுக்கு சேவகம் செய்வதற் காக மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த காலகட் டத்தில் பருப்பு, எண்ணெய், அனைத்து வகையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசி பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற் றத்தால் ஒருநாள் பொழுதை மக்கள் எப்படி கடப்பது என்ற கேள்வி எழுந் துள்ளது. வருமான உயர்வு இல் லாத இந்த விலை உயர்வால் குடும் பத்திற்குள் சண்டை சச்சரவுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணம் என்னவென்று நாம் தற் போது புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் வருகிற சண்டைக ளுக்கு ஒருவரின் பிறந்த நேரமோ அல்லது வேலையோ அல்ல. மாறாக இந்த விலை உயர்வுக்கு காரணம் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசுதான் என் பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 

இதுஒருபுறமிருக்க பெட்ரோல்,  டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் கள் மீது வரி மேல் வரி விதித்து நம் முடைய வாழ்வாதாரத்தையே ஒன் றிய பாஜக அரசு சீரழித்து கொண்டி ருக்கிறது. இந்த விலை உயர்வால்  இருசக்கர வாகன ஓட்டிகள், நான்கு  சக்கர வாகன ஓட்டிகள்தான் சிரமப் படுவார்கள் என்று நாம் நினைக்கக் கூடாது. நமக்கான மளிகை பொருட் களை கொண்டு வரக்கூடிய வாக னங்கள் பெட்ரோல், டீசலில் தான்  இயங்குகிறது. அப்படி இருக்கை யில் எரிபொருட்களின் விலை உயர்ந் தால், அந்த வாகனத்தில் வரும் பொருட்களின் விலைகளும் கடு மையாக உயரும். அதனால், எரி பொருட்கள் விலை உயர்ந்தால், நமக்கென்ன என்று இருக்கக் கூடாது. அத்தியாவசிய பொருட்க ளின் விலை உயர்வால் நம் வாழ்வா தரம் படுகுழியை நோக்கி இட்டு சென்று கொண்டிருக்கிறது. இந்த விலை உயர்வு குறைய வேண்டு மென்றால், ஒன்றிய பாசிச அரசு தனது கார்ப்பரேட் வரிக்கொள்கை கையை மாற்ற வேண்டும். எரி பொருட்களின் மீது விதித்துள்ள செஸ், சஸ் சார்ஜ் உள்ளிட்ட பலவித மான வரிகளை ரத்து செய்ய வேண் டும். நாடு முழுவதும் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம், இதர ஜனநாயக அமைப்புகள் மற்றும்  இடதுசாரி அரசுகள் மக்களை ஒருங் கிணைந்து வலுவாக போராடி வரு கிறது. ஒன்றிய பாஜக அரசின் கார்ப் பரேட் வரிக்கொள்கையை எதிர்த்த போராட்டத்தை தீவிரப்படுத்த வேண் டும், என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.ராதிகா, மாவட்ட தலைவர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப் பினர் எஸ்.ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர் சுசிலா வெங்கிடசாமி, பொருளாளர் ரேவதி கருப்புசாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் பெரிய நாயக்கன்பாளையம் பேரூராட்சி கவுன்சிலர் சிவராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றினார்.  முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாதர் சங்கத்தினர் எரி வாயு சிலிண்டரை பாடை கட்டி, ஒப்பாரி வைத்து நூதன போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராள மான பொதுமக்கள் பங்கேற்றனர்.