districts

img

குடியிருப்பு பகுதிக்குள் கரடி

உதகை,பிப். 14- காந்திபேட்டை குடியிருப்பு பகுதிக்குள் சர்வசாதாரண மாக சுற்றி வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள னர். உதகை நகரை சுற்றி தொட்டபெட்டா, கேர்ன்ஹில் உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டெருமை, கரடி போன்ற  வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில்  தற்போது வறட்சி காலம் தொடங்கி உள்ளது. இந்நிலையில்  வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர்  பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் வனவிலங்குகள் கிராமப்  பகுதிக்குள் நுழைவது தொடர்கதை ஆகியுள்ளது. இந்நிலை யில்,செவ்வாயன்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியே றிய கரடி, உதகை நகரின் மையப்பகுதிக்கு வந்தது. வீட்டு  வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக உதகை மேற்கு  காவல் நிலையத்திற்குள் நுழைந்து மீண்டும் அந்த பகுதியில் இருந்து வெளியேறி ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் குடியி ருப்பு சாலைகளில் உலா வந்தது. அந்த கரடி ஊருக்குள் வந்த தைப் பற்றி கவலைப்படாமல் சர்வ சாதாரணமாக வனப்ப குதியில் இருப்பது போல் உலா வந்தது. தற்போது, உதகை  அடுத்த காந்திபேட்டை குடியிருப்பு பகுதிக்குள் கரடி சுற்றித்  திரிந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன  ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சாலையோரம் வாக னங்களை நிறுத்தி இயற்கை காட்சிகளை ரசிக்கும் சுற்றுலாப்  பயணிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.