திருப்பூர், ஜன.31– திருப்பூர் மாநகராட்சியில் எரியாத தெரு விளக்குகள், தேங்கிக் கிடக்கும் குப்பை களை அள்ளுவதில் தாமதம், சாக்கடை கால் வாய்களைத் தூர்வாருவதில் தாமதம் என பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாகப் புகார் தெரிவித்தனர். திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட் டம் மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் ஆணையர் எஸ்.ராமமூர்த்தி, துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான்கு மண்டலத் தலைவர்கள் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். இதில் கூட்டம் தொடங்கியவுடன் கடந்த 60 நாட்களில் நடைபெற்ற பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மண்டலத் தலைவர் இல.பத்ம நாபன் பேசத் தொடங்கியபோது, அதிமுக கவுன்சிலர்கள் மேயரிடம் சென்று கோரிக்கை மனுக் கொடுத்து சொத்து வரி ரத்து குறித்து பேசினர். பின்னர் வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் எஸ்.ரவிசந்திரன், திருப்பூரில் சொத்து வரி உயர்வு குறித்து எம்.பி., எம்.எல்.ஏ., மேயர் ஆகியோர் முதல்வரிடம் கோரிக்கை வைத்து மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்துள் ளதால், சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரினார். ஆனால் சொத்து வரியை குறைப் பது குறித்து பரிசீலித்து முதல்வர் அறிவிப்பார் என்பதால், அரசின் வழிகாட்டுதல்படி செயல் பட முடியும் என்று மேயர் பதிலளித்தார். இதைத் தொடர்ந்து அரசியலுக்காகத் தவ றான பிம்பம் உருவாக்க வேண்டாம் என சொன்ன மேயருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவா தம் ஏற்பட்டது. தீர்மானம் நிறைவேற்ற வலியு றுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சி லர்கள் வெளிநடப்பு செய்தனர். திருப்பூருக்கு மட்டும் சொத்துவரி உயர்த்தப்பட்டிருப்பதாக சொல்வது தவறு, அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி களுக்கு மாநில அரசின் உத்தரவின்படிதான் சொத்து வரி உயர்த்தப்பட்டது. திருப்பூரில் மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரம் சொத்து வரி விதிப்புகள் உள்ளன. இதில் 4197 சொத்து வரி விதிப்புகளுக்கு மட்டுமே உயர்த்தப்பட் டுள்ளது. மற்றபடி ஆண்டுக்கு 6 சதவிகித உயர்வு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தில் கொண்டு வரப்பட்டது. பழைய கட்டிடங்க ளுக்கு புதிதாக அளவீடு செய்து வரி விதிப்பு செய்யவில்லை. பழைய கட்டிடங்களில் கூடு தலாக கட்டப்பட்டிருந்தால், அவற்றுக்கு மட் டுமே தற்போதைய வரி விதிக்கப்படுகிறது. பழைய கட்டிடங்களுக்கு புதியவரி விதிக்கப் படவில்லை என்று மேயர் தினேஷ்குமார் தெரி வித்தார். இக்கூட்டத்தில் பேசிய மண்டலத் தலை வர்கள், மண்டலங்களுக்கு ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு என்பது போதுமானதல்ல, இதில் பணிகள் செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வருவ தில்லை. எனவே அந்த நிதியை கூடுதலாக வழங்க வேண்டும் என்றனர். மூன்றாவது மண் டலத்தில் எந்த அதிகாரியும் எந்த வேலை யும் செய்வதில்லை, எனவே தனியாக ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என்று மண்டலத் தலைவர் கோவிந்தசாமி கூறினார். திங்களன்று கூட்டம் நடத்தலாம் என மேயர் பதிலளித்தார். இக்கூட்டத்தில் பேசிய திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி கவுன்சிலர்கள், வீதிகளில் மட்டுமின்றி பிரதான சாலைகளில் கூட தெருவிளக்குகள் எரிவதில்லை. பழுது நீக்க அழைத்தாலும் யாரும் வருவதில்லை என்று சரமாரியாகக் குற்றம் சாட்டினர். தெரு விளக்குப் பராமரிப்பு பணி செய்யும் ஒப்பந் ததாரர்களையும் கூட்டத்தில் வரவழைத்தி ருந்த நிலையில் கவுன்சிலர்கள் பலரும் அவர் களிடம் கேள்வி எழுப்பினர். ஆட்கள் பற்றாக் குறை இருப்பதுடன், பொருட்கள் வர வில்லை என்றும், தரமில்லாத பொருட்க ளைக் கொண்டு வேலை செய்வதாகவும் கூறப்பட்டது. தெரு விளக்குப் பராமரிப்பு பணியை கண்காணித்து புகார்களை சரி செய்ய பொறுப்புள்ள அதிகாரிகளை நிய மிக்க வேண்டும் என்றும் கோரினர். இதேபோல் குப்பை அள்ளுவது, கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்துவது, குடிநீர் குழாய் அமைப்பது, கசிவுகளை சீரமைப்பது என அன்றாட அடிப்படை பணிகளை ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனத்தினர் முறையாக செய்வதில்லை. கவுன்சிலர்களிடம் தகவல் சொல்வதில்லை, பதிலளிப்பதில்லை என்று கவுன்சிலர்கள் சரமாரியாகப் புகார் கூறினர். மின்சார வாரியமும் தாமதம் செய்வது குறித்து தெரிவித்தனர். 53ஆவது வார்டு கவுன்சிலர் மணி மேகலை, நொச்சிபாளையம் பகுதியில் தேங் கும் கழிவுநீரை சுத்தப்படுத்தித் தர பல முறை கோரியும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறினார். இது மாநில நெடுஞ்சாலைத் துறைக்குரியது. நிதியில்லை என வேலை செய்யாமல் இருக்கின்றனர். கடிதம் அனுப்பி யிருக்கிறோம் என மேயர் சொன்னார். திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் கட் டப்பட்டு திறப்பு விழா செய்தும் மாநாட்டு அரங்கம் இன்னும் திறக்கப்படாமல் இருப் பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சி லர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் தனியார் ஒப்பந்தத்தாரர்களிடம் விடாமல் நேரடியாக மாநகராட்சி கட்டுப்பாட்டிலேயே வைத்தி ருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.