திருப்பூர், ஜன.5 - பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட் டத்தில் வெள்ளகோவில் பகுதியில் இருக்கும் கிளை கால்வாய் குப்பைகள் கொட்டப்பட்டு பராமரிப்பு இல்லாமல் மோசமாக இருக்கிறது. குறிப்பாக வெள்ளகோவில் கிளை கால்வாய்க்கு உட்பட்ட சரகம் 10-400கி.மீ வலதுபக்கம், மிதி பாறை - சத்யா நகர் என்ற இடத்துக்கு அருகில் செல்லும் பகிர்மான வாய்க்கால் குப்பைத் தொட் டியாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் வெள்ளக்கோவில் பிர தான கால்வாயில் காங்கேயம் முத்தூர் ரோடு கங்கா நகர் அருகில், இல்லியம் புதூர் காலனி ஆகிய பகுதிகளும் குப் பைக் கூளமாக உள்ளன. இந்த வட்டாரத்தில் உள்ள பாசன விவசாயிகள் பல வருடங்களாக தொடர்ந்து குப்பைகளை அகற்ற கோரிக்கை வைத்தும், உள்ளாட்சி நிர் வாகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்ப தாக கூறுகின்றனர். இது பற்றி வெள்ள கோவில் பாசன கால்வாய் விவசாயிகள் காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலாவதியிடம் புகார் தெரிவித்துள்ள னர். பிஏபி கால்வாய்களில் உள்ள இந்த குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகம் முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், இந்த குப்பைகளை விவசாயிகள் எடுத்து வந்து, காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத் தில் கொட்டப்படும் என்று கூறியுள் ளனர். தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் போற்றப்பட வேண்டியவை, பாதுகாக் கப்பட வேண்டியவை, சுத்தமாக இருக்க வேண்டியவை என்று தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் வலி யுறுத்தி வந்தாலும் நடைமுறையில் இப் பரச்சனைக்கு தீர்வு காணாமல் தொடர்ந்து வருகிறது என்று விவசாயி கள் குற்றம் சாட்டினர்.