districts

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா கல்லூரியில் பதாகை வெளியீடு

புதுக்கோட்டை, ஜன.23- தமிழ்நாடு அறிவியல் இயக் கம் நடத்தும் 4-ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி மரு தன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் விளம் பரப் பதாகை வெளியிடப்பட்டது. 4-ஆவது புதுக்கோட்டை புத்த கத் திருவிழா வருகின்ற பிப்.14 முதல் 23-ஆம் தேதிவரை புதுக் கோட்டை நகர்மன்ற வளா கத்தில் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவையொட்டி கறம்பக் குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளம்பரப் பதாகை வெளியிடப்பட்டது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர்(பொ) ந. சுலோக்சனா தலைமை வகித்து பதாகையை வெளியிட்டார். அவர் பேசும்போது, ஆசிரியர் களும், மாணவர்களும் புத்தகத் திருவிழாவில் பெருமளவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்க வேண்டும் என அறிவு றுத்தினார். பதாகையை பேரா சிரியர்களும் மாணவர்களும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், கல்லூரியின் சார்பில் மாணவர்களிடம் விருப்ப நிதி யாக பெற்று அத்தொகையில் வாங்கவேண்டிய புத்தகங்க ளுக்கான நிதியை தினந்தோறும் சேகரிக்க உதவும் வகையில் புத் தக உண்டியல் திறந்து வைக்கப் பட்டது. இந்த உண்டியலில் வசூல் ஆகும் தொகையை கொடுத்துவிட்டு அதற்குண்டான புத்தகங்களை கல்லூரிக்கு வாங்குவதற்கான மாணவர் குழு வையும் அமைக்கப்பட்டது. முன்னதாக ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரவி வரவேற்க, உடற்கல்வி இயக்கு னர் கு.கிருஷ்ணசாமி நன்றி கூறி னார். அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனைவர் ரெ.பிச்சைமுத்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

;