கோவை, நவ.20- வங்கியில் கடன் கட்ட தவறிய தொழில் முனைவோரை குடும்பத் துடன் வெளியேற்றிய வங்கி அதி காரிகளை கண்டித்து, கோவை தொழில் அமைப்புகளின் கூட்ட மைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோவை கண்ணப்பா நகரைச் சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த் (45). இவர் கோவை சின்னவேடம்பட்டி அருகே சிஎன்சி மெஷின் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நி லையில், கடந்த 2017-ம் ஆண்டு தொழிலை விரிவுபடுத்த அவிநாசி ரோட்டில் உள்ள ஆர்பீஎல் வங்கி யில் ரூபாய் 1கோடியே 31 லட்சம் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். தொடர்ந்து 2020 வரை தவணை தவறாமல் மாதம் தோறும் ரூ.1.97 லட்சம் கட்டி வந்து ள்ளார். கொரோனா காலத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கத்தினால் தொழில் நலிவடைந்த நிலையில், தவணை கட்ட முடியாமல் இருந்துள்ளார். 2021 ஆம் ஆண்டு வங்கியில் பணம் கட்ட கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மேலும் 2022 ஆண்டு ரூ.10 லட்சம் தவணை தொகையை கட்டி உள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் தொடர்ந்து 3 மாதத்திற்கு மேல் தவணை கட்டவில்லை என்றால் வங்கியில் உள்ள மத்திய அரசின் விதிகளின் படி கடனுக்காக வைத் துள்ள அடமான சொத்து பறிமுதல் செய்யப்படும் என்றும், உடனடி யாக வட்டியுடன் ரூ.1 கோடியே 70 லட்சம் கட்ட வேண்டும் என்று கூறிவிட்டனர்.
இந்நிலையில், போலீசார் படை யுடன் வீட்டிற்கு வந்த வங்கி அதி காரிகள், வங்கியின் வழக்கறி ஞர்கள் உதவியுடன் கணேஷ் ஆனந்த் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற்றி சாவியை எடுத்து சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட கணேஷ் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் என்ன செய் வது என்று தெரியாமல் சாலை யில் நிறுத்தப்பட்டனர். இது குறித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறு கையில், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் சில மாற்றங்கள் செய்து கடனை தருவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்த சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூட தலையிட முடியும் என தெரிவித்த அவர், மாவட்ட ஆட்சியர் இதில் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண் டார். அம்பானி, அதானி போன்ற கார்ப்ரேட்டு முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களை கட னாக கொடுத்துவிட்டு, அதனை வசூலிக்காமல் தள்ளுபடி செய்யும், ஒன்றிய அரசு, சாதாரண சிறுகுறு தொழில்முனைவோர் கட்ட வேண் டிய சிறுதொகைக்கான கடன் தவ னைக்கான காலத்தை அதிகரிக்க கேட்டும், அதனை பரிசீலிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றி செயல் கடும் அதிர்ப்தியை ஏற்ப டுத்தியுள்ளது.