தருமபுரி, ஜன.5- 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு வங்கி ஊழி யர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் களுக்கும் 20 சதவிகித ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மாநில அரசின் அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டது. கூட்டுறவு ஊழியர்க ளுக்கு மட்டும் 10 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டது. மீத முள்ள 10 சதவிகித போனஸ் வழங்க வேண்டும். ஊழியர் கடன்களுக்கு ஏற்கனவே பெற்றுவந்த வட்டி விகிதத்தை உயர்த்தியதை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் (பெபி) சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் எஸ்.அறிவழகன், மாவட்ட பொதுச்செய லாளர் ஜி.சாமிகண்ணு, மாவட்டப் பொருளாளர் எம்.வடி வேல், நிர்வாகிகள் வி.பழனிவேல், ஆர்.சூடாமணி, வி.வெங்க டேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.