நாமக்கல், ஜூலை 2- சேவை குறைபாடு புரிந்த வங்கி நிர்வா கம், லாரி உரிமையாளருக்கு ரூ. 11 லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் செவ்வாயன்று உத்தரவு பிறப்பித் தது. நாமக்கல் மாவட்டம், கள்ளுக்காடு கிரா மத்தில் வசிப்பவர் பி.ஆர்.முகிலன் (41). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடந்த 2017 டிசம்பரில் ரூபாய் 23 லட்சத்தை கடனாக பெற்று லாரி ஒன்றை வாங்கி உள் ளார். இவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் கடன் வழங்கிய வங்கி மீது வழக்கு தாக்கல் செய் தார். அதில், 59 மாதங்களுக்கு ரூ.48,400/- வீதம் கடன் தொகையை செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தப்படி 16 மாதங்கள் மாதாந்திர தவணை தொகைகளை வங்கியில் செலுத் திய நிலையில், கடந்த 2019 செப்டம்பர் மாதத் தில் எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் லாரியை வங்கி நிர்வாகம் அடியாட்களை வைத்து கைப்பற்றிக் கொண்டது. சொந்த பணம் ரூ.12 லட்சத்தையும், கடன் பெற்ற பணம் ரூபாய் 23 லட்சத்தையும் செலுத்தி ரூ.35 லட்சத்தில் லாரியை வாங்கிய நிலை யில், கடந்த 2021 ஜூன் மாதத்தில் சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் ரூ.13,65,000க்கு லாரியை வங்கி விற்று விட் டது. லாரியை விற்ற பணம் போக இன்னும் ரூ. 11,39,786 வங்கிக்கு செலுத்துமாறு வங்கி தமக்கு அறிவிப்பு அனுப்பி உள்ளது. இத் தகைய சேவை குறைபாட்டிற்காக வங்கி தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கில் கேட்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராம ராஜ், உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் விசாரணையில் வங்கி சேவை குறைபாடு புரிந்துள்ளதாக நிரூபிக் கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் லாரியை ஏலத்தில் விற்பனை செய்ததற்கு ரூ. 6,75,000 இழப்பீடாகவும் சேவை குறைபாட் டால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.4,54,786 இழப்பீடாகவும் (மொத்தம் ரூ 11,39,786) நான்கு வார காலத்திற்குள் லாரி உரிமையா ளருக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண் டும் என உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகை யிலிருந்து வங்கிக்கு செலுத்த வேண்டிய பணத்தை பிடித்தம் செய்து கொண்டு வழக்கு தாக்கல் செய்தவர் வங்கிக்கு எவ்வித தொகை யும் செலுத்த வேண்டியது இல்லை என்று சான்றிதழை வழங்குமாறும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.