சூறைக்காற்றில் வாழை மரங்கள் நாசம்
சூலூர், மார்ச் 27- சூலூர் அருகே மழையுடன் வீசிய சூறைக்காற்றில் இரண் டாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்ததால் விவ சாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை, வதம்பச்சேரி, செஞ்சேரிபுத்தூர், செஞ்சேரிமலை உள்ளிட்ட இடங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட இயக்கங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழைத்தார்கள் அறு வடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சுல்தான்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. அறு வடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால், விவசாயிகள் அதிர்ச்சிய டைந்துள்ளனர். தகவலின் பேரில் வருவாய் அலுவலர்கள் மற்றும் வேளாண் அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண் டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மையிலிருந்து நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சிய ருக்கு தோட்டக்கலை துறையினரால் அறிக்கை தயார் செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றில் வாழை மரங்கள் முற்றிலுமாக முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது வருத்தம் அளிக்கிறது எனவும், தற்போதைய சூழலில் அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
நாமக்கல், மார்ச் 27- பல்வேறு வழக்குகளில் சிக்கி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடுவதற்கான அறிவிப்பை காவல்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்டு, காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட 4 நான்கு சக்கர வாக னங்கள், 1 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 25 இரு சக்கர வாகனம் மொத்தம் 30 வாகனங்களை அரசு பறி முதல் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 29.03.2023-ஆம் தேதி யன்று நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காலை 10 மணிக்கு,வாகனங்கள் பொது ஏலத்தில் விட இருப்பதால், 28.03.2023-ஆம் தேதி காலை 10-மணிமுதல் மாலை 5-மணி வாகனங்களை பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர் 29.03.2023ம் தேதி காலை 09-மணிக்கு ரூ.5.000-ஆம் முன் பணமாக நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்தி, ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். வாக னத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் மற்றும் ஜிஎஸ்டி தொகையுடன் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ரூ. 1.20 கோடிக்கு பருத்தி ஏலம்
தாராபுரம், மார்ச் - 27 திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடை பெற்றது. இதில், அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன் றிற்கு ரூ. 8 ஆயிரத்து 99 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 6 ஆயிரத்து 100 க்கும் சராசரி விலையாக ரூ. 7 ஆயிரத்து 150 க்கும் விலை போனது. மொத்தம் 5473 மூட்டைகள் 1 ஆயிரத்து 73 குவிண்டால் பருத்தி ரூ. 1 கோடியே 20 லட்சத்து 91 ஆயிரத்து 276 க்கு விற்பனையானது.
பாத்திர தொழிலாளர்கள் நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருப்பூர், மார்ச் 27- பாத்திர தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு வழங்காமல் காலம் கடத்தி இழுத்தடிக்கும் பாத்திர உற்பத்தி யாளர் சங்கங்களை கண்டித்து மார்ச் 29ஆம் தேதி புதன்கி ழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என பாத்திர தொழிலாளர் சங்கங்களின் கூட்டு கமிட்டி முடிவு செய்துள் ளது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் பாத்திர தொழிலாளர்க ளுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்துவிட்டது. தொடக்கத்தில் ஓராண்டு காலம் கழித்து பேசிக் கொள்ளலாம் என்று காலம் கடத்திய பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தினர், பிற்பாடு பேச்சுவார்த்தைக்கு வந்தனர். எனினும் எவர்சில்வர் பாத்திர உற்பத்திக்கு 10 சதவிகிதமும், பித்தளை பாத்திர உற் பத்திக்கு 15 சதவீதமும் மட்டுமே கூலி உயர்வு வழங்க முடியும் என்று கூறி புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக திங்களன்று பாத்திர தொழி லாளர் சங்கங்களின் கூட்டு கமிட்டி கூட்டம் கூட்டு கமிட்டி தலை வர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு அனுப்பர்பாளையத்தில் உள்ள எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தின் முன் பாக பாத்திர தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத் துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் அலங்கியத்தில் கொள்முதல் முடங்கியதால் விவசாயிகள் பாதிப்பு
திருப்பூர், மார்ச் 27 – அலங்கியம் அரசு நெல் கொள்மு தல் நிலையத்திற்கு வரும் விவசாயிக ளிடம் 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ. 10 வீதம் லஞ்சம் வாங்கித் தருமாறு சுமைப்பணி தொழிலாளர்களிடம் அதிகாரிகள் கேட்ட ஆடியோ வெளி யாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருதரப்பினர் சர்ச்சை காரணமாக நெல் கொள்முதல் செய் வது கடந்த இரு தினங்களாக முடங் கிப் போய் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே அலங்கியம் மற்றும் சுற்றுவட் டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப் பட்டு அறுவடை பணிகள் நடை பெற்று வருகிறது. தாராபுரம், அலங் கியம், தளவாய்பட்டினம், கொளத் துப் பாளையம், சத்திரம், நஞ்சியம் பாளையம் உள்ளிட்ட ஏழு இடங் களில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படு கிறது. அலங்கியம் அரசு கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களாக அரசு அதிகாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர் இடையே பிரச்சனை ஏற்பட்டு தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 10 நாட்க ளாக அலங்கியத்தில் நெல் கொள்மு தல் செய்யப்பட்டு வந்தது. எனினும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் சுமை தூக்க வேண்டாம் என அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. இது குறித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் அரசு நெல் கொள் முதல் நிலைய அதிகாரிகள் 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.10 லஞ்சம் கேட் பதாக கூறியுள்ளனர். லஞ்சம் தர மறுத்ததால் அந்த தொழிலாளர்கள் சுமை தூக்க வேண்டாம் என அதி காரிகள் கூறியதாக தெரியவந்துள் ளது. சுமை தூக்கும் தொழிலாளர், நெல் கொள்முதல் நிலைய அதிகாரி கள் இருதரப்பினரும் அலங்கியம் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். அதேசமயம் அதிகாரிகள் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு ரூ.10 கேட்கும் ஆடியோ பரபரப்பு ஏற் படுத்தி உள்ளது. இதனால் தற்போது கடந்த இரண்டு நாட்களாக விவசா யிகளிடம் நெல் கொள்முதல் செய்யா மல் நெல்மணிகள் குவியல் குவிய லாக தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள னர். விவசாயிகளிடம் நெல் கொள்மு தல் செய்ய லஞ்சம் கேட்கும் அதிகா ரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் முடக்கப்பட்டதற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன் வலியு றுத்தி உள்ளார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:53.15/60அடி நீர்வரத்து:823கன அடி வெளியேற்றம்:147கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:52.63/90அடி.நீர்வரத்து:214கனஅடி வெளியேற்றம்:75கன அடி மழையளவு:25மிமீ
குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த 3 பேர் கைது
தருமபுரி, மார்ச் 27- மொரப்பூர் அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள வகுத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவருடைய மனைவி சாக்கம்மாள் என்கிற புனிதவதி (56). இவர் தருமபுரி அருகே உள்ள பாளையம்புதூர் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவர் கொரோனா காலத்தில் பணியில் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வேலை பார்த்தபோது அந்த பகுதியில் உள்ள ஒரு சிலரை கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவரிடம் அழைத்து சென்று கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கூறியுள்ளார். இதையடுத்து முருகேசன் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி சேச சமுத்திரம் பகுதியில் மெடிக்கல் நடத்தி வந்த செல்வமணி மகன் கவியரசன் (28) என்பவர் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கவியரசனுக்கும் சாக்காம்மாளின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெண் ஒருவர் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை அறிய ஸ்கேன் செய்து கூறுமாறு சாக்கமாளிடம் கேட்டுள்ளார். இதையடுத்து கவியரசன், அவருக்கு உதவியாக வந்த கள்ளக்குறிச்சி சங்கராபுரம் பகுதியை சேர்ந்த அய்யனார் (34) ஆகியோர் வகுத்தானூரில் உள்ள சாக்கம்மாள் வீட்டிற்கு வந்தனர். பின்னர், தாங்கள் கொண்டு வந்த கருவி மூலம் பாலினத்தை அறியும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மருத்துவ துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அரூர் வட்டார அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா தலைமையில் மருத்துவ குழுவினர் வகுத்தானூரில் சாக்கம்மாள் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு குழந்தையின் பாலினத்தை கண்டறியும் மொபைல் ஸ்கேனர் வைத்து பரிசோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஷ் கண்ணா மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சரோஜா வழக்குப்பதிவு செய்து கவியரசன், அய்யனார் மற்றும் சாக்கம்மாள் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யானைகள் மோதலில் ஆண்யானை பலி
ஈரோடு, மார்ச் 27- ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள சென்னம் பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வடபர்கூர் காப்புக்காடு, தண்டா வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ஞாயிறன்று வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப் போது அங்கு ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வனச்சரகர் ராஜா மற்றும் கால்ந்டை மருத்துவர்கள் சென்று பார்வையிட்டனர். அப்போது யானையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, யானையை பிரேத பரிசோதனை செய்ததில், 2 ஆண் யானைகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் மற்றொரு யானையின் தந்தம், இறந்த ஆண் யானையின் தலையில் குத்தப்பட்டு இறந்தது தெரிய வந்தது. இறந்த ஆண் யானையின் வயது 40. பிரேத பரி சோதனைக்கு பின்பு யானையின் உடலை வனத்துறையினர் அங்கேயே மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக விட்டு வந்தனர். மேலும், யானையிடம் இருந்து சுமார் 5 அடி நீளம் உள்ள ஒரு ஜோடி தந்தங்கள் எடுக்கப்பட்டு சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டது. சமீபத் தில் அந்தியூர் வனச்சரத்திற்கு உட்பட்ட தென்பர்கூர் காப்புக்காடு பகுதியில் குட்டியுடன் தாய் யானை இறந்து கிடந்த நிலையில், தற்போது சென்னம்பட்டி வனச்சரகப் பகுதியில் 2 ஆண் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ஆண் யானை இறந்துள்ளது வன உயிரின ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.