districts

நிலுவைத்தொகை முழுமையாக வழங்கப்படும்

ஈரோடு, ஜூன் 28- பால் நிலுவைத்தொகைகள் முழுமை யாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ.தங்கராஜ் தெரிவித்தார்.   ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி யாளர் ஒன்றிய அலுவலகம் சித்தோட்டில் உள்ளது. இங்கு நடைபெற்ற கலைஞர் நூற் றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பால்வளத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் கலந்து கொண் டார். இந்நிகழ்ச்சியில், ரூ.4.56 கோடி மதிப்பீட்டி லான பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கினார். அப் போது, தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல்  மாதத்தில் சராசரியாக 27 லட்சத்து 80 ஆயி ரம் லிட்டர் அளவில் பால் கொள்முதல் செய் யப்பட்டு வந்தது. தற்போது 31 லட்சத்து 27 ஆயிரம் லிட்டராக கொள்முதல் உயர்ந்துள் ளது. அதில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 27 ஆயிரம் லிட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு இலக்கு நிர்ண யம் செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. ஆவின் என்பது தமிழகத்தில் மிகப்பெரிய நிறுவனமாகும். இங்கு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளது. ஆவின் நிறு வனத்தில் நேரடியாகவும் மற்றும் மறைமுக மாகவும் அதிக எண்ணிக்கையில் பணியாற்று கின்றனர். இந்நிறுவனத்தின் சார்பில் சரியான தரத்தில் மற்றும் தரமான விலையில் பொது மக்களுக்காக பால் விற்பனை செய்து வரு கின்றோம்.

இங்குள்ள சிறு சிறு பிரச்சனைகளை படிப்படியாக தீர்த்து வருகின்றோம். அதன் படி, பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப் பட வேண்டிய நிலுவைத் தொகையினை முழுமையாக வழங்கப்படும். இனி வரும் நாட்களில் வாரந்தோறும் பால் உற்பத்தி யாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்ப தற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. மேலும், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் கவனமாக பரி சீலிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். தொடர்ந்து, 50 பால் உற்பத்தியாளர்க ளுக்கு வங்கிகள் மூலம் ரூ.50 லட்சம் மதிப் பீட்டில் கறவைக்கடன் உதவியினையும், 23 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தலா 2 கிடாரி கன்று வாங்கு தல் மற்றும் பராமரிப்பிற்கான உதவித் தொகையினையும், 182 பால் உற்பத்தியா ளர் உறுப்பினர்களுக்கு ரூ.149 லட்சம் மதிப் பீட்டில் கறவை மாடுகளை பராமரிப்பதற் காக கனரா வங்கி சார்பில் பராமரிப்பு கடனு தவியும் வழங்கப்பட்டது. 268 பால் உற்பத்தி யாளர்களுக்கு ரூ.134 லட்சம் மதிப்பீட்டில் தலா 1 கறவை மாடு வாங்குவதற்காக வங்கிக் கடனுதவியும், தாளவாடி பகுதியில் உள்ள  3 சங்கங்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் பால் பகுப்பாய்வு கருவி உள்ளிட்ட ரூ.4.56 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோசினி சந்திரா, ஆவின் பொது மேலாளர், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தி னம் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.