தருமபுரி, ஜூன் 27- கூத்தப்பாடி அருகே தரமற்ற தார்ச்சாலை அமைத் ததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பென்னா கரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூத்தாபடி ஊராட்சிக்குட்பட்ட அம்மாபள்ளம் கிராமத் தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மனுக்களை கொடுத்து, தார்ச்சாலை அமைத்து தர வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கூத்தபாடி மண்டுவிலிருந்து அம்மாபள்ளம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்பந்தம் விடப் பட்டது. தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் நடை பெற்று வந்தது. இச்சாலை அமைப்பதற்கு அதே கிரா மத்தில் உள்ள ஏரியிலிருந்து மண் எடுத்து வந்துள்ளனர். ஆனால், மண்சாலை பணிகள் முடிந்தவுடன் அதனை சுத்தம் செய்யாமல் அதன் மீது தார்ச்சாலையும் அமைத் துள்ளனர். இதனால் தார்ச்சாலை தரமில்லாமல் போடப் பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, அரசு அலுவலர்கள் இந்த சாலையை நேரில் வந்து ஆய்வு செய்து, தரமான சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பென் னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பொது மக்கள் வியாழனன்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகு றித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள், தார்ச்சாலையை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனையேற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.