சென்னை,நவ.12- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறி வாளன் கடந்த 1991-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாள னின் தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தால் கடந்த 2017 ஆம் ஆண்டு 2 மாதம் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில் குயில் தாசன் உடல்நிலை மோச மடைந்திருப்பதால் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரை உடனிருந்து பார்த்துக் கொள்வ தற்காகவும் சகோதரியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வ தற்காகவும் பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அர சுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப் பட்டார். பின்னர், வேலூர் சிறையி லிருந்து பலத்த காவல் பாது காப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.