ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அயோத்தி தாசர் மேம்பாட்டு திட்டம்
ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அயோத்தி தாசர் மேம்பாட்டு திட்டம் ஈரோடு, ஜுன் 19- அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ‘எல்லாருக்கும் எல்லாம்” என்ற அடிப்படை யில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதி கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிரா விடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஐந்தாண்டுகளில் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்பட வுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு 2023 – 2024 ஆம் நிதியாண்டிற்கு ரூ.200 கோடி நிதியொதுக்கீடு செய்து அரசா ணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின், கீழ் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பவானி சாகர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, நம்பி யூர், பெருந்துறை, சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய 11 ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளின் மேம்பாட் டிற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் முதல் தவணையாக ரூ. 60 லட்சமும், இரண்டாம் தவணை யாக ரூ.70 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் புதிய ஆழ் குழாய் கிணறு தோண்டி, மோட்டார் பொருத்தி குடிநீர் விநியோகிக்கும் பணி, தெருவிளக்குகள் அமைத்தல், சமுதாய கூடம் அமைத்தல், சிமெண்ட் சாலைகள் அமைத்தல், மயான கூரை அமைத் தல், வடிகால் அமைத்தல் உள்ளிட்ட 62 பணிகள் எடுக்கப் பட்டது. அதில் 58 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
காவல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு தருமபுரி ஜூன் 19- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மொரப் பூர் காவல்நிலையத்திற்கு சென்ற தருமபுரி ஆட்சியர் கி. சாந்தி ஆய்வு மேற்கொண்டார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் - திட்டத்தின் கீழ் மொரப் பூர் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா செயல்பா டுகள், வழக்குகள் பதிவு செய்த பதிவேடுகள் மற்றும் வருகை பதிவேடு ஆண்கள் மற்றும் பெண்கள் கைதி அறைகளை ஆய்வு செய்தார். குற்றவாளிகள் பிடிக்கப்படா மல் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய் தார். பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது விசா ரணை செய்து சட்டப்படி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட் டார்.
மஞ்சூர் சாலையில் சிறுத்தை உலா
மஞ்சூர் சாலையில் சிறுத்தை உலா உதகை, ஜூன் 19- மஞ்சூர் அருகே மெரிலேண்ட் சாலையில் உலா வந்த சிறுத் தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்ட, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தை, காட்டெருமை, கரடி, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வன விலங்கு நடமாட்டத்தால் விளை நிலங்களில் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று மஞ்சூர் – உதகை சாலை யில் மெரிலேண்ட் பகுதியில் சாலையோரம் சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது. அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து, வாகனத்தில் இருந்தவாறு மொபைல் போனில் வீடியோ பதிவு செய்தனர். சாலையோரம் அமர்ந்திருந்த சிறுத்தை வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்ட தும் சற்று துாரம் சாலையில் மெதுவாக நடந்து சென்று வனப்ப குதிக்குள் சென்றது. சிறுத்தை உலா வந்த இடம் அருகே மெரிலேண்ட் கிராமம் உள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டம் பகுதியில் குந்தா ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.
உதகை மண்டலத்தில் சுழற்சி முறையில் பணி அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு
உதகை, ஜூன் 19- அரசு போக்குவரத்து கழக உதகை மண்டலத்தில், 500 தற்காலிக, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு எடுக்கப் பட்டு, 48 நாட்கள் சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ், உதகை, குன்னுார், கோத்தகிரி, கூட லுார் மற்றும் மேட்டுப்பாளையத்தில் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது. உள் ளூர், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநி லம் என, 270 வழித்தடத்திற்கு, 320 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகி றது. நாள் தோறும், 1.30 லட்சம் பயணி கள் அரசு பேருந்தை பயன்படுத்துகின் றனர். இந்நிலையில், போக்குவரத்து கழ கத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள் ளது. உதகை மண்டலத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் என 30 சதவீதம் பணி யிடங்கள் காலியாக உள்ளது. கடந் தாண்டில் ஊழியர்கள் பற்றாக்குறை யால் வழித்தட பேருந்துகள் அவ்வப் போது நிறுத்தப்பட்டதால் மலை மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். இதனால் அரசுக்கு கடும் அவப் பெயர் ஏற்பட்டது. இதனையடுத்து, தற் காலிக பணியாளர்களை நியமித்து சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘ஓட்டுநர் மற் றும் நடத்துநர் பணி கேட்டு வருபவர்க ளிடம் அதிகாரிகள் ஓட்டுநர் மற்றும் நடத் துநர்களின் ஆவணங்களை சரிபார்த்து தகுதியுள்ளவர்களை தேர்ந்தெடுத்த பின், பணிமனைக்குள் ஒரு மணி நேரம் பயிற்சிக்கு பின், திருப்திகரமாக இருந் தால் பணி வழங்கப்படுகிறது. அதன்படி, அரசு போக்குவரத்து கழக உதகை மண் டலத்தில், 500 தற்காலிக ஓட்டநர், நடத் துநர்கள் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இதில், சம்பளமாக பணிமுடித்து செல் பவர்களுக்கு, ரூ.1,400 ரூபாய் வழங்கப்படு கிறது. பணிகளை பகிர்ந்து அளிக்கும் வகையில், ஒரு தற்காலிக ஊழியருக்கு, 48 நாட்கள் பணி வழங்கிய பின், பிரேக் செய்து சுழற்சி முறையில் அடுத்த முறை மீண்டும் பணி வழங்கி வருகிறோம்.’ என்றனர்.
‘தோழி விடுதிகள்’ அமைக்க இடங்கள் தேர்வு
கோவை, ஜூன் 19- அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள நிலங்களில் தோழி விடுதிகள் திட் டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள தாக தகவல் வெளியாகிள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களில் உள்ள மாநகரங்க ளுக்கு பணி புரிய பெண்கள் செல்லும் போது பலரும் தனியார் விடுதிகளில் தங் குவர். பெண்கள் அனைவர்க்கும் தனி யார் விடுதி கட்டணங்களை செலுத்து வது சுலபமாக இருக்காது. சிலருக்கு பாதுகாப்பு குறித்தும் ஐயமிருக்கும். மேலும், பெண்கள் நலன் கருதி பல் வேறு மாவட்டங்களில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ‘தோழி விடுதிகள்’ திறக்கப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டு, ரூ.13 கோடி மதிப் பில் செங்கல்பட்டு மற்றும் திருச்சியில் மகளிர் விடுதிகள் திறக்கப்பட்டன. மேலும், ரூ 3.42 கோடி மதிப்பில் சென்னை, அடையாறு, விழுப்புரம், தஞ்சை, சேலம், வேலூர், நெல்லை மற்றும் பெரம்பலூரில் மொத்தமாக 7 விடுதிகள் புதிப்பிக்கப்பட்டு பயன்பட் டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த விடுதிகளில் தங்க முன்பதிவு செய்ய விரும்புவோர், https://www.tnwwhcl.in/ எனும் இணையத் தளம் மூலம் தங்களுக்கு தேவைப்படும் அறைகளை முன்பதிவு செய்யலாம். இதன் கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 4000 அதிகபட்சம் ரூ.6,500 ஆக நிர்ண யம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், 2024-25 நிதியாண் டுக்கான நிதிநிலை அறிவிப்பின் போது, தமிழக அரசு கோவை, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் பணிபுரியும் மகளிருக்கான ‘தோழி விடுதிகள்’ திட் டத்தின் கீழ் பெண்களுக்கான புதிய விடுதி கள் அமைக்க ரூ. 26 கோடி ஓதுக்கி உள் ளது. இதற்கு இடங்கள் தேர்வு செய்யும் பணியை அரசு ஜூன் 18 ஆம் தேதி மேற் கொள்ள உள்ளது. தற்போது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள நிலங்கள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய் யப்பட்டு உள்ளதாக வெளியாகி உள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதாள சாக்கடையில் பெண் விழுந்த சம்பவம் ஒப்பந்ததாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
பாதாள சாக்கடையில் பெண் விழுந்த சம்பவம் ஒப்பந்ததாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் கோவை, ஜூன் 19- பாதாள சாக்கடையில் இளம் பெண் விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, கவனக்குறைவாக செயல்பட்ட ஒப்பந்ததார ருக்கு ரூ.50 ஆயிரம் அபராம் அளிக்க மாநகராட்சி ஆணை யாளர் உத்தரவிட்டார். கோவை மாவட்டம், காந்திபுரம் 100 அடி சாலையில் இரு புறத்திலும், சாக்கடை கால்வாய் செல்கிறது. அதன் மேல் நடை பாதை அமைக்கப்பட்டு உள்ளது. சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டால் நீக்குவதற்காக ஆங்காங்கே ஆள் இறங்கு குழி அமைத்து மூடி போடப்பட்டு உள்ளது. இதில், 100 அடி சாலையில் சாக்கடை கால்வாயில் அடைப்பு சரி செய்ய ஆள் இறங்கும் குழியை ஒப்பந்ததாரர் திறந்து உள்ளார். அதன் பிறகு அவர் அதை மூடாமல் அஜாக்கிரதையாக சென்று விட் டதாக தெரிகிறது. இதற்கு இடையே அந்த நடைபாதை யில் நடந்து சென்ற பெண் எதிர்பாராத விதமாக சாக்கடை கால்வாய் குழாயில் தவறி விழுந்தார். அவர் படுகாயத்து டன் உயிர் தப்பினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்க ளில் வைரலானது. இதைத் தொடர்ந்து கவனக்குறைவாக செயல்பட்ட ஒப்பந்ததாரருக்கு ரூபாய். 50 ஆயிரம் அபராதம் வசூலிக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார். மேலும், அவர் மாநகர் முழுவதும் ஆய்வு செய்து நடை பாதை மீது மூடி கள் மூடப்படாமல் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண் டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அம்மா பெற்ற கடனுக்காக 14 வயது சிறுவனை வேலை செய்யச் சொல்வதாக புகார்
அம்மா பெற்ற கடனுக்காக 14 வயது சிறுவனை வேலை செய்யச் சொல்வதாக புகார் அவிநாசி, ஜூன் 19 - அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் பொது மக் களை சந்தித்து குறைகளை கேட்டு கொண்டிருந்தார். அப் போது 14 வயது சிறுவன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது, குளத்துப்பாளையம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி கருமத்தம்பட்டி அருகே குளத்துப்பா ளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் சின்னகுட்டி (எ) சண்முகம் என்ற நபரிடம் 60 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்று பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில், மகேஸ்வரிக்கு காலில் கொப்பளப் பிரச்சனை ஏற்பட்டதால், அவிநாசி அரசு மருத்துவமனையில் சில தினங்களாக சிகிச்சை பெற்று வந் துள்ளார். இதனால், தறி குடோன் உரிமையாளர் சண்முகம் மகேஸ்வரி பெற்ற கடனுக்காக 14 வயது மகனை வேலைக்கு வருமாறு வற்புறுத்தியதாக மகன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.
விதிகளுக்கு புறம்பாக சான்றுகள் கேட்கும் மின்வாரியத்தை கண்டித்து போராட்டம்
உடுமலை, ஜூன் 19- மின் இணைப்பு பெற தனிப்பட்டாவுக்கு உரிமை சான்று தேவை இல்லையென்று வருவாய்த்துறை கூறியுள்ள நிலை யில், மின்வாரிய அதிகாரிகள் சான்று கேட்டு காலதாமதம் செய்வதை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார் பில் அங்கலக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, தனி பட்டாவுக்கு உரிமை சான்று தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும். இல்லை எனில் வரும் ஜூலை 3 ஆம் தேதி உடுமலையில் உள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உடுமலை விவசாயிகள் பாது காப்பு சங்கம் இணைந்து காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கீழ்பவானி தண்ணீர் திருட்டை தடுக்க கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தல்
திருப்பூர், ஜூன் 19- கீழ்பவானி பாசன கால்வாயில் நடைபெ றும் தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் தலைமைச் செயலா ளர் பிறப்பித்திருக்கும் வழிகாட்டுதலை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயி கள் வலியுறுத்தி உள்ளனர். கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர் கள் சங்க பொருளாளர் எம்.வி.சண்முகராஜ், கீழ்பவானி பாசன பிரதான கால்வாய் பகுதி களில் தண்ணீர் திருட்டை தடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு செய்திருந்தார். குறிப்பாக நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆயக்கட்டு பகுதிகளிலி ருந்து ஆயக்கட்டு அல்லாத பகுதிகளுக்கு சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சி பயன்ப டுத்தக் கூடாது. அதற்குரிய மின்சார இணைப் புகளை துண்டிக்க வேண்டும், சட்டவிரோத குழாய்களை கால்வாய் பகுதிகளில் அகற்ற வேண்டும், விவசாய பயன்பாடு அல்லாத கிணறுகள், ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு அக் டோபர் ஐந்தாம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதில் கீழ்ப வானி பாசன கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திருட்டை தடுத்து நிறுத்த ஈரோடு கரூர் திருப் பூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கோவை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியா ளர் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட் டிருந்தது. இதன் அடிப்படையில் மேற்கண்ட அதிகா ரிகளும் தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு எடுக் கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை நீதிமன் றத்தில் தெரிவித்து இருந்தனர். குறிப்பாக கூட்டு கண்காணிப்பு குழு அமைத்து தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறியிருந்தனர். இதன் அடிப்படையில் கீழ்ப வானி பிரதான கால்வாயிலும் அதன் பகிர் மான கால்வாய்களிலும் அனுமதி அற்ற வகை யில் எந்த வகையிலும் தண்ணீர் எடுக்கக் கூடாது. முறைகேடாக தண்ணீர் எடுக்கும் பம்பு செட்டுகளை கண்டறிந்து முற்றிலும் அகற்ற வேண்டும். பிரதான கால்வாயில் இருந்து 50 மீட்டருக்குள் திறந்த வெளி கிணறு களுக்கு, ஆழ்துளை கிணறுகளுக்கும், பகிர் மான கால்வாயில் இருந்து 25 மீட்டருக்குள் திறந்த வெளி கிணறுகளுக்கு, ஆழ்ந்த கிணறு களுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும். இப்பகுதியில் முறையற்ற வகை யில் நீரேற்றம் செய்வோர் மீது சட்ட நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பகுதி யில் இருந்து லாரிகள் மூலம் அல்லது இதர வாகனங்கள் மூலம் நீர் ஏற்றம் செய்வோம் நீர் கடத்துவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆயக்கட்டு பகுதி யில் சிறிய அளவு நிலத்தை கிரயம் செய்து பெற்று திறந்த வெளி கிணறுகள் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நூதனமான முறையில் வணிக பயன்பாட்டிற்கு அல்லது தொழிற் சாலை பயன்பாட்டிற்கு அல்லது குளிர்பான நிறுவனங்களுக்கு முறையற்ற வகையில் தண்ணீர் எடுப்பதை உடனடியாக தடை செய்ய வேண்டும். கால்வாயின் பக்கவாட்டு கரையிலிருந்து குறுக்கே துளையிட்டு நீர் எடுப்பதை தடுக்க வேண்டும். இந்த அடிப்ப டையில் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின் பற்றாத, தவறு செய்யக் கூடியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என்று கூடுதல் தலைமைச் செயலா ளர் சந்திப் சக்சேனா ஆணை பிறப்பித்துள் ளார். அவரது ஆணையின் அடிப்படையில் தண்ணீர் திருட்டு கடத்தலை தடுப்பதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழ்பவானி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தொழிலாளி கொலை: மூவர் கைது
தொழிலாளி கொலை: மூவர் கைது திருப்பூர், ஜூன் 19 - திருப்பூர் மாநகரில் பனியன் நிறுவனத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் கோல்டன் நகர் கருணாகரபுரி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). பனியன் நிறுவனத் தொழிலாளி. செவ்வாய் மாலை சதீஷ்குமார் வீட்டுக்கு அருகே உள்ள பேக்கரி ஒன்றில் தேநீர் சாப்பிட்டு விட்டு, வெளியே அமர்ந்திருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் சதீஷ்குமாரை, வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில், சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர். இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீஸார்தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், பாலா (எ) பாலகிருஷ்ணன், சக்தி சண்முகம் மற்றும் பாண்டியராஜன் ஆகிய 3 பேர் இன்று (ஜூன் 19) கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 2 பேரை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
உரிய நேரத்தில் அரசு பேருந்து இயக்காததால் மாணவர்கள் அவதி
குந்தா நீரேற்று திட்டப்பணிகள் மீண்டும் துவக்கம்
உரிய நேரத்தில் அரசு பேருந்து இயக்காததால் மாணவர்கள் அவதி தருமபுரி, ஜூன் 19- தருமபுரியில் இருந்து பாப்பாரப்பட்டி பேரூராட்சி வழி யாக செல்லும் அரசு நகரபேருந்துகள் உரிய நேரத்தில் இயக் காததால் பொதுமக்கள் மாணவர்கள் பெரும் சிரமத்திற்குள் ளாகின்றனர். தருமபுரி நகரிலிருந்து பாப்பாரப்பட்டி பேரூராட்சி வழி யாக பல கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படு கின்றன. பாப்பாரப்பட்டி அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தருமபுரி நகருக்கு ஏராளாமானோர் பயணம் செய் கின்றனர். குறிப்பாக தருமபுரி நகரத்தில் தினக்கூலி தொழிலாளர்க ளாக ஜவுளிகடை உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு ஆண் பெண் இருபாலரும் வந்து செல்கின்றனர். மேலும் அப்பகுதி யில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்க ணக்கானோர் வந்து செலகின்றனர். அதுமட்டும் இல்லாமல் விவசாயிகள் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல தருமபு ரிக்கு வந்து பேருந்து மாறவேண்டும். இந்நிலையில், இப்பகுதியில் இயக்கப்படும் பல்வேறு அரசு பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்காமல் காலதாம தமாக இயக்கப்படுகிறது. இதனால், பள்ளி கல்லூரி மாண வர்கள் உரிய நேரத்திற்கு செல்லமுடிவதில்லை, கூலி தொழி லாளர்களும் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை. விழாக்காலங்களில் இப்பகுதி பேருந்துகளை வேறு வழித் தடத்திற்கு அனுப்பிவிடுவதால் இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், மாணவர்கள் கால்கடுக்க நிற்க்க வேண்டிய தாக உள்ளது. மேலும், வேறு வழியில்லாமல் ஷேர் ஆட்டோக் களில் செல்லும் நிலை உள்ளது. அரசு நகரப் பேருந்துகளை முறையாக சரியான நேரத்தில் இயக்காததால் அரசின் விலை யில்லா பேருந்துப் பயணத்தைப் பயன்படுத்த முடியாமல் ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்ட ணம் கொடுத்து பயணம் செய்யும் நிலைக்கு பயணிகள் தள் ளப்பட்டுள்ளனர். எனவே காலை மாலை நேரங்களில் அரசு பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குந்தா நீரேற்று திட்டப்பணிகள் மீண்டும் துவக்கம்
குந்தா நீரேற்று திட்டப்பணிகள் மீண்டும் துவக்கம் உதகை, ஜூன் 19- கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட காரணங்க ளால் நிறுத்தி வைக்கப்பட்ட குந்தா நீரேற்று திட்டப்பணிகள் தற் போது விரைவாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே காட்டு குப்பையில், ரூ. 1,800 கோடி ரூபாயில், நான்கு பிரிவில், தலா 125 மெகா வாட் என, 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான, குந்தா நீரேற்று மின் நிலையத்திற்கான பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக, 2,200 மீட்டருக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சுரங்க பாதைக் குள் கட்டுமான பணியும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் கோவை, ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய மையப்பகுதிகளில் உள்ள மின் நிலையங்களுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு வினியோகிக்கப்ப டுகிறது. அதற்காக, காட்டு குப்பையிலிருந்து எமரால்டு, புது அட்டுபாயில், எடக்காடு, முக்கிமலை, கெத்தை, பில்லுார் ஆகிய பகுதிகளில் ராட்சத மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘2013 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இப்பணி, 2017 டிசம்பர் மாதம் நிறைவு பெற்று, மின் உற்பத்தி துவக்க வேண்டும் என, திட்ட மிடப்பட்டது. ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில், நிர்வாக காரணங்களாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாலும், 2023 ஆம் ஆண்டு, நிறைவு பெற்று மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர்.
மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பழுதால் வீணாகும் குடிநீர்
தருமபுரி ஜூன் 19- நூலஹள்ளி ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுது ஏற்பட் டுள்ளதால், 24 மணி நேரமும் குடிநீர் வீணாகி வருகிறது கவலையை ஏற்படுத் தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், நூலஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட சின்ன நூலஹள் ளியில், 400 க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக, சின்ன நூலஹள்ளியில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் அதன் அருகிலேயே, 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந் தது. இந்நிலையில், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் குழாய்கள் பழுத டைந்துள்ளதால், அதிலிருந்து 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும், வீணாகும் தண்ணீர் அப்பகுதி யில் தேங்கி நின்று, சுகாதார சீர்கேடு ஏற் பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப் பாட்டை போக்குவதற்கு குடிநீர் வீணா கும் இடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், சின்னநூலஹள்ளியில் தொடர்ந்து, குடிநீர் வீணாவது பொதுமக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கோவை ஜூன் 19- கோவையில், டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 23 தேதியன்று நடைபெற உள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (பிஇஎப்ஐ) மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (ஏஐஐஇஏ) இணைந்து நடத்தும் வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, திருச்சி சாலையில் சரோஜ் நிலை யத்தில் ஜூன் 23 தேதியன்று நடைபெற உள்ளது. இந்த வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவிற்கு வாட்ஸ் அப் இல் 94436 22408, 94430 24973, 9488155191, 9487591972 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெயர் ஊர் ஆகி யவற்றை பதிவு செய்யலாம்.
நெடுஞ்சாலையில் சிறுவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைதுக்கு பின் பிணையில் விடுவிப்பு
நெடுஞ்சாலையில் சிறுவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைதுக்கு பின் பிணையில் விடுவிப்பு சேலம், ஜூன் 19 - எந்தவித பாதுகாப்பும் இன்றி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி அளித்த வீடியோ வைரல் ஆன நிலையில், பயிற்சியாளர் மீது மல்லூர் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பனமரத் துப்பட்டி பிரிவு ரோட்டில் இருந்து ஆண்டகலூர் கேட் வரை எந்தவித அனுமதியும் இன்றி 12 சிறுவர்களுக்கு பிரபாகரன் என்ற இளைஞர் ஸ்கேட்டிங் பயிற்சி கொடுத்தார். இது தொடர் பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. குறிப்பாக வாகனங்கள் நிறைந்த தேசிய நெடுஞ்சாலை யில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் ஸ்கேட்டிங் பயிற்சி கொடுப்பது பலரையும் அதிர்ச்சிக்குள் ளாக்கியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைர லானது. இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஸ்கேட்டிங் பயிற்சியா ளர் எந்த அனுமதியும் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் ஸ்கேட்டிங் பயிற்சி கொடுத்தது தெரியவந்தது. இதனைய டுத்து, பிரபாகரன் மீது மூன்று பிரிவின் கீழ் மல்லூர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்தனர். பின்னர், விசாரணை மேற்கொண்டு, இதன் அடிப்படையில் பிரபாகரனை கைது செய்து, பின்ன காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர்.