தருமபுரி, டிச.29- அரூரில் போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்க ளுக்கு எதிராக கிரிக்கெட் போட்டி ஞாயிறன்று நடைபெற் றது. தருமபுரி மாவட்டம், அரூரில் போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக, அரூர் டிவிஸ்டர்ஸ் கிரிக் கெட் கிளப், நீதிசேனை அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. இப்போட்டிகளில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன. அரூர் கேபிஏ குரூப்ஸ் அணி முதல் பரிசும், எச்டிசிசி அணி இரண் டாம் பரிசும், அரூர் பழையபேட்டை பிசிசி அணி மூன்றாம் பரிசும் பெற்றன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அரூர் டிவிஸ் டர்ஸ் கிரிக்கெட் கிளப், நீதிசேனை அறக்கட்டளை, சட்டம் மற் றும் சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் நிர்வாகிகள், திரைப்பட இயக்குநர் எஸ்.ஜி.சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.