சேலம், மே 31- சேலத்தில் ‘எமதர்மன்’ வேடம் அனிந்து, புகையிலைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. உலக புகையிலை ஒழிப்பு தினம் மே 31 ஆம் தேதி கடை பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அரசு மற்றும் தன் னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தன்னார்வ அமைப்பின் சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதில் ‘எமதர்மன்’ வேடம் அணிந்து போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், உடல் பாதிப்புகள் குறித்தும் விளக்கி காண்பிக்கப்பட்டது. மேலும், சிகரெட், மதுபானங்கள் மற்றும் போதை ஊசி ஆகிய வடிவில் உடைகள் அணிந்து, ஒவ்வொரு போதை பொருள்களும் பேசுவது போல் தத்ரூபமாக நடித்து காண் பித்தனர். இந்த விழிப்புணர்வு அந்தப் பகுதியில் இருந்த பயணிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இதைத்தொ டர்ந்து புதிய பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று, ஒவ்வொரு பயணிகளுக்கும் புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாமக்கல் இதேபோன்று, இந்திய பல் மருத்துவ சங்கத்தின் திருச் செங்கோடு கிளை சார்பில், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் இருந்து துவங்கிய பேரணி, நகரின் நான்கு ரத வீதிகள் வழியாக சென்றது. திருச்செங்கோடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பல் மருத்துவக்கல்லூரி மற்றும் குமாரபாளையம் ஜேகேகேஎன் பல் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பேரணியின் முடிவில் கல்லூரி மாணவ, மாணவிகள் தெருக்கூத்து வடி வில் நாடகம் நடத்தி, புகையிலைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தினர்.