போதைக்கெதிராக விழிப்புணர்வு
சேலம், அக். 6- போதைக்கு எதிராக, மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் வேடம் அணிந்து, சேலத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. சேலத்தில் புதிய பேருந்து நிலையத்திலும் சேலம் அரசு மருத்துவமனை எதிரிலும் பொதுமக்கள் விழிப்புணர்வு உரிமை அறக் கட்டளையின் சார்பில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், காந்தி, அம்பேத்கர் வேடம் அணிந்து போதை யில்லா தமிழகத்தை உரு வாக்குவதற்காக அறக்கட் டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று நடை பெற்றது. இதனைத்தொ டர்ந்து, தருமபுரி கிருஷ் ணகிரி உள்ளிட்ட மாவட்டங் களிலும் விழிப்புணர்வு செய்ய இந்த குழுக்கள் சென்றுள்ளனர். பொது மக்கள் மத்தியில் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் விழிப்புணர்வு உரிமை அறக் கட்டளையின் சார்பாக செந் தில் தெரிவித்தார். பல்வேறு மாவட்டங்களிலும் விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக விழிப்புணர் வில் ஈடுபட்டவர்கள் தெரி வித்தனர்.
நிழற்கூட கோரிக்கை
தருமபுரி, அக். 6- அல்லியூர் கிராமத்தில் நிழற்கூடம் மற்றும் தார்ச் சாலையை அகலப்படுத்திட பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த அல்லி யூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் 4 வழிச்சாலை அமைக்க அங் கிருந்த நிழற்கூடம் மற்றும் தார்சாலையின் ஒரு பகுதி கையகப்படுதப்பட்டது. அப் போது தேசிய நெடுஞ் சாலைத்துறை சார்பில் புதிய நிழற்கூடம் அமைத்து தார் சாலையை விரிவுபடுத்தி தரு வாக உறுதி அளித்திருந் தனர். ஆனால் 4 வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 6 மாதத்திற்கு மேலாகிறது. இதுவரை நிழற்கூடம் அமைக்கப்பட வில்லை, தார் சாலையும் விரிவுபடுத்தப்பட வில்லை. அல்லியூர் கிராமத்தை சுற்றி கொல்லன் கொட்டாய், கல்லாங்கட்டணூர், சங்கம் பட்டி, வரகூர், மாட்டியாம் பட்டி, காமலாபுரம் உள் ளிட்ட 7 கிராமங்களில் 2 ஆயி ரத்திற்க்கும் மேற்பட்ட குடும் பங்களை சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் விவ சாயவிளைப் பொருட்களை எடுத்து செல்வதற்கும், பள்ளி, கல்லூரி வாகனங் கள் செல்வதற்கும் செல்ல அல்லியூர் தார் சாலையே பிரதான வழியாகும், இந்நி லையில் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட் டதால் வாகனங்கள் அல்லி யூர் சாலையில் திரும்ப முடி யாத நிலையிலும், பொது மக்கள் நிழற்கூடம் இல்லா ததால் வெயிலிலும், மழையி லும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட் டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலை துறையும் அல்லியூர் கிராமத் திற்கு நிழற்கூடம் மற்றும் சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ள னர்.
இந்தியாவை ஆளும் தகுதியை இழந்துவிட்டார் மோடி ஈவிகேஎஸ். இளங்கோவன் தாக்கு
கோபி, அக்.6- இந்தியாவை ஆளும் தகுதியை மோடி இழந்துவிட்டார் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங் கோவன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபியில் தமிழ்நாடு மகளிர் காங்கி ரஸ் சார்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணத்தை ஈவி கேஎஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. வெள்ளியன்று துவக்கி வைத்தார். கோபி பேருந்து நிலையத்தில் தொடங்கி கச்சேரி மேடு பகுதியில் நிறைவடைந்தது. பின்னர் ஈவிகேஎஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை மோடியைப் பொறுத்த வரை வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மட்டும் மகிழ்ச்சியாக செல்கிறார். அவர் இந்தியாவை ஆளும் தகுதியை இழந்து விட்டார். கடந்த 10 ஆண்டுகளாக மோடியை நம்பி ஒப் படைத்த இந்திய மக்களுக்கு அவர் பல கொடுமைகளை செய்துவிட்டார். எடப்பாடியைப் பொறுத்தவரை தனியாக கட்சி நடத்த முடியாது. அவர்களை நம்பி ஒட்டு மொத்த தொண்டர்களும் போக மாட்டார்கள். மக்களும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க மாட்டார்கள். விஜய் சொல்கின்ற கொள்கைகளை நிறை வேற்றுகின்ற கட்சிகளாகத்தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளன. எனவே அவர் காங்கி ரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எந்த கட்சி யில் வேண்டுமானாலும் சேரலாம். விஜய் கட்சி ஆரம் பித்ததால் யாருக்கும் வாக்கு வங்கி குறையவோ, அதிக ரிப்பதோ கிடையாது. மக்களை மகிழ்விப்பவராகத் தான் விஜய்யை பார்க்கிறார்களே தவிர வழிகாட்டுகின்ற ஒரு தலைவராக மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார் கள். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி பெறும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணித் தலைவர் ஹசீனா சையத், வடக்கு மாவட்டத் தலைவர் சரவணன், முன்னாள் நகராட்சித் தலைவர் நல்லசாமி, நகரத் தலைவர் மாரிமுத்து, மாநில செய்தி தொடர்பாளர் கோதண்டன் பொதுக்குழு உட் பட பலர் கலந்து கொண்டனர்.
மின் வாரியங்களுக்கு இடையேயான கிரிக்கெட் தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் இரண்டாம் இடம்
கோவை, அக்.6- தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்திய மின் வாரியங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் இரண் டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. கோவை மாவட்டம், நவஇந்தியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனியன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில் 46 ஆவது அகில இந்திய மின் வாரியங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், கர்நாடக பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்ரேஷன் முதலிடத்தை யும், தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் இரண்டாம் இடத்தை யும், ஒடிசா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்ரேஷன் லிமிட் மூன்றாம் இடத்தையும், சட்டீஸ்கர் மாநில பவர் டிரான்ஸ் மிஷன் கார்ப்ரேஷன் லிமிட் நான்காம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பதக்கங்களையும் பரிசுகோப்பையினை யும் வழங்கினார். இவ்விழாவில், மாநகராட்சி மேயர் ஆர்.ரங்கநாயகி, விளையாட்டு துறை துணை இயக்குநர் பத்மஸ்ரீ ஜோஸ்னா சின்னப்பா, விளையாட்டு அலுவலர் சுபா வெங்கடேசன், மாந கராட்சி துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தமிழ்நாடு மின்பகிர்மான கழக இயக்குநர் கே.இந்திராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விவசாயிகளின் வாழ்க்கையில் பாஜக அரசு விளையாடுகிறது
கோவை, அக். 6- விவசாயிகளின் வாழ்க்கையில், ஒன்றிய பாஜக அரசு விளையாடு கிறது என காங்கிரஸ் கட்சியின் தலை வர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநி லத் தலைவர் செல்வ பெருந்தகை ஞாயிறன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். கொங்கு பகுதி யில் விவசாயிகள் மாநாட்டை நடத்து கின்றனர் ஆனைமலை நல்லாறு திட் டம் பற்றி மிகப் பெரிய வாதம் நடை பெற்று இருக்கிறது, அதனை நிறை வேற்ற வேண்டும். அதில் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளேன். கடந்த 10 ஆண்டு காலமாக வேளாண் பெருங் குடி மக்கள் சாலைகளில் போராடும் நிலைகளை பார்த்து வருகிறோம். கடன் சுமையால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 3 வேளாண் சட் டங்கள் கொண்டு வந்து நூற்றுக் கணக்கான விவசாயிகள் மரணம் அடைவதற்கு காரணமாக இருந்தது பாஜக ஆட்சி. விவசாயிகளின் பெரும் போராட்டம் காரணமாக அந்த சட்டத்தை மறுபடியும் திரும்ப பெற்றார்கள். விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடுகின்ற அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக் கிறது. திருப்பதி லட்டு எந்த ஒரு அறிக்கையும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பவன் கல்யாண் கருத்து கூறி உள்ளார். லட்டு விவ காரத்தில் உச்ச நீதிமன்றம் தலை யிட்டு விசாரித்து நல்ல முடிவை அறி விக்க வேண்டும். பக்தர்க ளுக்கு தேவை இல்லாத குழப்பத்தை ஆந்திராவின் அரசு ஏற்படுத்துகிறது. அங்கு கொடுக்கப்பட்ட நெய் குஜ ராத் என கூறப்படுகிறது. குஜராத்தில் உள்ள அந்த கம்பெனி உரிமையா ளர் யார், அந்த அறிக்கை கொடுப்பது குஜராத்தில் இருந்து எப்படி வந்தது, மக்களுக்கு தெரியப்படுத்த வேண் டும் என்றார்.
தமுஎகச 253 ஆவது இலக்கியச் சந்திப்பு
கோவை, அக்.6- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 253 ஆவது இலக்கியச் சந்திப்பு ஞாயிறன்று நடை பெற்றது. தமுஎகச கோவை மாவட்டக்குழு வின் சார்பில் 253 ஆவது இலக்கிய சந்திப்பு கோவை தாமஸ் கிளப்பில் ஞாயிறன்றுநடைபெற்றது. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் படைப்புகள் ஆய்வரங்கம் நிகழ்வாக நடைபெற்றது. இந்நிகழ்விற்க்கு, கவிஞர் இரா.பானுமதி தலைமை வகித்தார்.கவிஞர் சுவலட்சுமி பர மசிவம் வரவேற்றார். எழுத்தா ளர் அ.கரீம், கவிஞர் இரா.பூபாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நாவல்களில் தொழிலாளர் போராட் டமும் நுண் அரசியலும் என்ற தலைப் பில் ஆய்வுரையை தூரிகை சின்னராஜ் மற்றும் சிறுகதைகளில் பெண்ணியச் சித்தரிப்பு எனும் ஆய்வுரையையும், கட்டுரைகளில் சமகால சூழலியல் பதிவுகள் என்ற தலைப்பில் ஆய்வுரை யும் கவிஞர் சுடர்விழி ஆகியோர் உரை நிகழ்த்தினர். ஆய்வுரைக்குப் பின்னர் எழுத்தா ளர் சுப்ரபாரதிமணியன் ஏற்ப்புரை யாற்றினார்.