ஈரோடு, ஏப்.4- மே2ல் மாற்றுத்திறனாளிகளின் கோரிக் கைகயை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என பவானி வட்ட சிறப்பு பேரவையில் முடிவெடுக்கப்பட் டுள்ளது. அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பவானி வட்ட சிறப்பு பேரவை பாலாஜி பத்மாவதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, வட்ட தலைவர் என்.சின்னச்சாமி தலைமை ஏற்றார். சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் ப.மாரி முத்து, மாவட்ட செயலாளர் ஆ.சகாதேவன் ஆகியோர் உரையாற்றினர். இதில், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி, விதொச பவானி மாவட்ட பொருளாளர் எஸ்.மாணிக்கம், சிஐடியு பவானி வட்ட செயலாளர் ஏ.ஜெக நாதன் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். இதில், மே 2 தேதி அன்று பவானி வட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை, 100 நாள் வேலைத்திட்ட பிரச்சனைகள் ஆகியவற்றை முன்வைத்து பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்தி ருக்கும் போராட்டத்தை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பேரவையில் வட்டத் தலைவராக என். சின்னசாமி, செயலாளராக கே.எஸ்.லீலா வதி, பொருளாளராக மனோகரன் உள் ளிட்ட 17 பேர் கொண்ட புதிய தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் பேரவையை நிறைவு செய்து உரையாற்றி னார்.