districts

img

அத்திக்கடவு - அவிநாசி திட்ட சோதனையோட்டம் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர்

திருப்பூர், மே 18 - அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் நீரேற் றம் செய்து குளம், குட்டைகளுக்கு தண்ணீர்  வழங்குவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்க ளில் வறண்ட நிலையில் உள்ள 13 ஊராட்சி  ஒன்றியங்களின் குளங்கள், குட்டைகளுக்கு  நீர் நிரப்பும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை  நிறைவேற்ற வேண்டும் என்று 60 ஆண்டு களுக்கு மேலாக இப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் கோரி வந்தனர். பல்வேறு விவசாய அமைப்புகள், சமூக  நல அமைப்புகள் இக்கோரிக்கை குறித்து தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு போராட்டங்கள் நடத்தி வந்தனர். முன்னதாக  மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. ரமணி கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் அத்திக்கடவு - அவிநாசி  திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் அரசின் கவனத் துக்கு கொண்டு சென்றார்.  ஆரம்பத்தில் திறந்தவெளி மண் வாய்க் கால்கள் மூலம் இந்த வட்டாரத்தில் உள்ள குளங்கள், குட்டைகளுக்கு நீர் நிரப்ப வேண்டும் என கோரப்பட்டது. இதன் மூலம் இந்த வட்டாரத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர் வதுடன், விவசாயப் பாசனத்திற்கும், கால் நடைகளுக்கும், பொது மக்களுக்கும் குடிநீர்  ஆதாரமாகவும் இருக்கும் என கூறப்பட்டது. எனினும் அரசு தரப்பில் இத்திட்டத்தின் சாத்தியப்பாடு குறித்து ஆய்வு செய்த பொறி யாளர் குழுவினர், குடிநீர் பயன்பாட்டிற்கு என  இத்திட்டத்தைச் செயல்படுத்தினால், திறந்த நிலை மண் கால்வாய்களில் கொண்டு செல்ல  முடியாது என்று மறுத்தனர். இதையடுத்து அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட் டும் விவசாயப் பாசனத் திட்டம் என நிறை வேற்றுமாறு வலியுறுத்தப்பட்டது.

60 ஆண்டு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் இப்பகுதி மக்களை திரட்டி, இந்த  திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. நடைபயணப் பிரச் சாரம், வாகனப் பிரச்சாரம், கோரிக்கை மாநாடு என அடுத்தடுத்து இயக்கங்கள் நடத் தப்பட்டது. இத்துடன் வறட்சி அதிகரித்து  விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் இப்ப குதி விவசாயிகள், சமூக ஆர்வலர்களும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த பின்னணியில் அடுத்தடுத்து வந்த  திமுக, அதிமுக அரசுகள் சார்பில் இத்திட் டத்தை நிறைவேற்றுவதற்கான ஆய்வு, மதிப் பீடு, விரிவான செயல் திட்டம் தயாரிப்பு என  பணிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சி யாக, இத்திட்டத்தின் தன்மையில் மாறுதல் செய்து குழாய் மூலமாக நீரேற்றம் செய்து குளங்கள், குட்டைகளில் நீர் நிரப்பும் திட்ட மாக மாற்றி அதிமுக ஆட்சிக் காலத்தில் அறி விக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்திற்கான குளங்கள், குட்டை கள் தேர்வு செய்வது, நீர் விநியோகக் குழாய் கள் பதிப்பு, நீர் உந்து நிலையம், நீரேற்ற நிலை யங்கள் அமைப்பது உள்ளிட்ட கட்டமைப்புப்  பணிகள் நடைபெற்று வந்தன. இப்போது  இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் செயல் பாடு குறித்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் இத்திட்டத்தை தமிழ் நாடு அரசு முழு செயல்பாட்டுக்கு கொண்டு  வரவுள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. உண்ணிகிருஷ்ணன், திருப்பூர் வடக்கு ஒன்றி யச் செயலாளர் ஆர்.காளியப்பன், தமிழ்நாடு  விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ரங்க சாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி, விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர்  நடராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க  ஒன்றியத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர்  வியாழக்கிழமை இத்திட்டப் பணிகள் நடை பெற்ற பகுதிகளைப் பார்வையிட்டனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், எம்மாம்பூண்டி அருகே வரப்பாளையத்தில் அமைந்திருக்கும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஐந்தாவது நீரேற்று நிலையத்தை நேரில் பார்வையிட்டனர். இங்கு தற்போது சோதனையோட்டம் நடைபெற்று வருகிறது.  நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் இயங்கும் இந்த  நீரேற்று நிலையத்தில் இருந்து திருப்பூர், புளி யம்பட்டி, அவிநாசி, சேவூர் உள்ளிட்ட பகு திகளில் 349 குளம், குட்டைகளுக்கு 8 கனரக  குழாய்கள் மூலம் நீர் கொண்டு செல்லப்படு கிறது. இந்த நீரேற்று நிலையத்தையும், இதி லிருந்து நீர் வெளியேற்றபடும் இடங்களில் ஒன்றான பட்டம்பாளையம் குளத்தையும் இவர்கள் பார்வையிட்டனர்.