திருப்பூர், ஜூன் 23 - அக்னிபாத் திட்டம் என்ற பெய ரில் நாட்டுப் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு ஒன்றியக் குழு சார்பில் பெருமாநல்லூர் சாலை போயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கி ழமை கோபாவேச ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆ.சிகாமணி, தௌ. சம்சீர் அகமது, ஒன்றியச் செயலா ளர் ஆர்.காளியப்பன், சிஐடியு பஞ் சாலை சங்கப் பொருளாளர் கே. பழனிசாமி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.அருள் ஆகியோர் அக்னிபாத் திட்டத்தின் நாசகர நோக்கம் குறித்து உரையாற்றினர். இந்த போராட்டத்தில் பெருந்திர ளானோர் கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக கண்டனம் முழங்கி னர். கட்சியின் ஒன்றியக்குழு உறுப் பினர் பி.மகேஸ்வரன் நன்றி கூறி னார்.
திருப்பூர் மாநகரம்
திருப்பூர் வடக்கு மாநகரத் துக்கு உட்பட்ட அவிநாசி சாலை பேருந்து நிறுத்தம் அருகே செவ் வாய்க்கிழமை அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநகரக்குழு உறுப் பினர் பா.சௌந்தரராசன் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன், வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன் ஆகி யோர் மோடி அரசின் மோசமான நட வடிக்கையை கண்டித்துப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தி ரளானோர் கலந்து கொண்டு கண் டன முழக்கம் எழுப்பினர்.