அவினாசி, ஜூன் 5- அவினாசி ஒன்றியம் தெக்கலூர், புதுப்பாளை யம், சாமந்தங்கோட்டை உள்ளிட்ட காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. மான்கள் இரைத்தேடியும், தண்ணீருக்காவும், காட்டைவிட்டு வெளி யேறும் போது, வாகனத்தில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில், சனியன்று தெக்கலூர் காட்டுப்பகுதியிலி ருந்து இரண்டு மான்கள் தண்ணீர் தேடி தெக்கலூர் ஏரிப்பா ளையத்தில் ஒரு கோவில் அருகே வந்துள்ளது. இதைப் பார்த்த அங்கிருந்த தெருநாய்கள் மான்களை துரத்தி சென்று கடித்துள்ளது. இதில் ஒரு மான் காட்டுக்குள் மறைந்து தப்பி யது. மற்றொரு 4 வயது மான், நாய்கள் கடித்ததில் உயிரிழந் தது. தகவலறிந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.