அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம் மூடல்
உதகை, ஜூலை 16- கனமழை எதிரொலியாக உதகை சுற்றுலா மையங்கள் இரண்டு நாட்கள் மூடப்படுகிறது.
நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அவலாஞ்சி வனப் பகுதி சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வனத்துறை வாகனத்தில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்கின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று அதிகாலை முதலே நீலகிரியில் அனைத்து பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அப் பர் பவானி, அவலாஞ்சி, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, செவ்வாயன்று மாலை நிலவரப்படி அவலாஞ்சியில், 18 செ.மீ., மழை பெய்துள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், அவலாஞ்சியில் செவ்வாயன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக சுற்றுலாப் பயணிகள் அவலாஞ்சி சூழல் மையத் திற்கு செல்ல செவ்வாயன்று முதல் புதனன்று (இன்று) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார். இதேபோன்று, கன மழை யின் காரணமாக உதகை வடக்கு சரகத்தில் இயங்கி வரும் தொட்டபெட்டா காட்சி முனை மற்றும் பைன் பாரஸ்ட் ஆகிய சுற்றுலாத் தலம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு
கோவை, ஜூலை 16- முகநூல் பக்கத்தில் சர்ச்சையான கருத்தை பதிவிட்ட இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதி
சமூக வலைதளங்களில் யாரேனும் இரு சமூகம், மதத்தி னர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து களை பதிவிடுகின்றனரா? என போலீசார் கண்காணித்து வரு கின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல் நிலையை காவல் உதவி ஆய்வா ளர் ஜெயபாலன் சமூக வலை தள பக்கங்களை கண்கா ணித்தார். அப்போது, இந்து முன்னணி கோவை நகரச் செய லாளர் ஜெய்சங்கர் என்பவரது முகநூல் பக்கத்தில் கோவில் இடிப்பு சம்பந்தமாகவும், அரசை விமர்சிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டு இருந் தார். இதுகுறித்து ஜெயபாலன் வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகா ரின் பேரில், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத் தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜெய்சங்கர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
தக்காளி விலை உயர்வு
சேலம், ஜூலை 16- தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது, மக்களை கவ லையில் ஆழ்த்தி உள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்துள் ளதால், அதன் விலை உயர்ந்துள்ளதென வியாபாரிகள் தெரி வித்துள்ளனர்.
சேலம் மார்க்கெட்டுகளுக்கு மேச்சேரி, மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி மற்றும் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், ஓசூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு பகுதி களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படு கின்றன. இதனை சேலம் மற்றும் சுற்றுவட்டார பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த வாரம் ரூ.40க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி விலை, கிடு கிடுவென உயர்ந்து தற்போது ரூ.85க்கு விற்பனையாகிறது. இதனால் தேவையைவிட குறைந்த அளவே பொதுமக்கள் தக்காளியை வாங்கி செல்கின்றனர்.
இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகை யில், தக்காளி விளைச்சல் அதிகம் உள்ள கர்நாடகா மாநிலம், பெங்களூரு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு தக்காளி செடிகள் அழுகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் என்பதால் விலை குறைய வாய்ப்பில்லை, என்றனர். தற்போது 20 கிலோ எடை கொண்ட ஒரு கிரேட் தக்காளி ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. இதை வியாபாரிகள் வாங்கி தரம் வாரியாக பிரித்து கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து வரு கின்றனர்.A
அணைகள் நிலவரம் (செவ்வாய்க்கிழமை)
பவானிசாகர் அணை
நீர்மட்டம்:70.93/105அடி
நீர்வரத்து:10399கனஅடி
நீர்திறப்பு: 955கனஅடி
மழையளவு: 4.8 மிமீ
மேட்டூர் அணை
நீர்மட்டம்:43.830 அடி
நீர்வரத்து:5054கனஅடி
நீர்திறப்பு:1000 கனஅடி
மழையளவு:4.8 மிமீ
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:28.20/72 அடி
நீர்வரத்து:4288கனஅடி
நீர்திறப்பு:57கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:128.68/160அடி
நீர்வரத்து:7248கனஅடி
நீர்திறப்பு: 858கனஅடி
மழையளவு:140 மிமீ
ஆழியார் அணை
நீர்மட்டம்:91.00/120அடி
நீர்வரத்து:1651கனஅடி
நீர்திறப்பு:82கனஅடி
மழையளவு:49 மிமீ
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:28.41/60அடி
நீர்வரத்து:21கனஅடி
நீர்திறப்பு:28கனஅடி