districts

img

அரசு மருத்துவமனையின் அவலம்: மாவட்ட நிர்வாகம் தலையிட வலியுறுத்தல் - ராமகிருஷ்ணன்

ஆறுதல் தரும் சித்த மருத்துவப்பிரிவு 

சித்த மருத்துவத்தில் பிஎச்டி படித்து விரல்விட்டு எண்ணக்கூடிய மருத்து வர்களில் ஒருவர், இம்முருத்துவமனையின் சித்தாபிரிவு மருத்துவராக பணி புரியும் நல்லதம்பி, சிறப்பான மருத்துவம் மூலம் பாராட்டுகளை பெற்றவர். தமிழ்நாடு அரசு பாரம்பரிய தமிழ் மருத்துவத்தை வளர்த்தெடுக்க அனைத்து மருத்துவமனைகளிலும் மூலிகை பண்ணை அமைக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டவுடன், முதன்முதலாக வேட்டைக்காரன்புதூர் மருத்து வமனையில் திருமூலர் மூலிகை பண்ணை அமைத்து அரிய மூலிகைகள் வளர்த்து வருகிறார். ஆயுர்வேதம், சித்தமருத்துவம் ஆகியவற்றை வளர்த் தெடுத்த சித்தர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என தமிழக அரசு வெளி யிட்ட அரசாணையின் அடிப்படையில், தமிழ்நாட்டிலேயே சித்த மருத்துவத் தின் முன்னோடி என புகழபடும் அகத்திய முனிவருக்கு சிலை வைக்கபட்ட பெருமையும் இம்மருத்துவமனைக்கு உள்ளது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த  சித்த மருத்துவ பிரிவில் மருத்துவர் தவிர உதவியாளரோ, மருந்தாளு நரோ, மூலிகை பண்ணைக்கான தோட்டபணியாளரோ இல்லை என்பது வேதனைக்குரியது.

கோவை, டிச.10- ராமகிருஷ்ணன் வேட்டைக்காரன்புதூர் வட்டார அரசு மருத்துவமனையின் பல்வேறு அவலங்களை களைய மாவட்ட நிர்வா கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலை தாலுகா, வேட்டைகாரன்புதூர் பேரூ ராட்சியில் செயல்பட்டு வரும் வட்டார அரசு மருத்துவமனை பல்வேறு புகார்க ளுக்கு ஆளாகியுள்ளது. வேட்டைக் காரன்புதூர், உடையகுளம், கோட்டூர், வட்டாரங்களில் வசிக்கும் பெரும்பகுதி உழைக்கும் மக்கள் மற்றும் டாப்சிலிப் உள்ளிட்ட மலைகிராமங்களிலிருந்து பழங்குடி மக்கள், காட்டு விலங்குக ளின் தாக்குதல் மற்றும் தினசரி விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கும் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கும் இம்மருத்துவனையை நாடி வருகின்ற னர். இம்மருத்துவமனையில் மருத்து வர் பற்றாக்குறை உள்ளது. தலைமை மருத்துவர் நோயாளிகளுக்கு மருத்து வம் பார்ப்பதில்லை. பெயரளவுக்கு மருத்துவமனைக்கு வந்துவிட்டு செல்வ தாகவும், இரண்டு துணை மருத்துவர் களில் பெண் மருத்துவரும் நோயாளி களை பார்ப்பதில்லை. ஆண் மருத்து வர் மட்டுமே வெளிநோளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக கூறப்படுகிறது. செவிலியர்கள் சிப்டுக்கு ஒருவர் மட் டுமே இருப்பதாக கூறுகின்றனர். தற்கா லிக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள், சர்க்கரை மற்றும் பிபி  ஆகியவற்றிற்கு இல்லந்தோறும் மருத் துவ சிகிச்சைக்காக தினமும் களத்துக்கு சென்று விடுகின்றனர். இம்மருத்துவமனைக்கு வெளிநோ யாளிகள் சுமார் 150 முதல் 200 பேர் வரை  தினமும் வந்து செல்கின்றனர். உள் நோயாளிகள் 10 முதல் 15 பேர் வரை சிகிச்சை எடுத்து வருகின்றனர். உள் நோயாளிகளை மருத்துவர்கள் எவறும் பார்ப்பதில்லை. மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்த ஒருவரின் உறவினரிடம் பேசுகையில், நோயா ளிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் செவிலியர்தான் பார்ப்பார். அதுவும்  வார்டுக்கு வருவதில்லை. நாங்கள் தான்  செவிலியர் அறைக்கு செல்ல வேண் டும். மாலை நேரங்களில் சிகிச்சைக்காக வரும் வெளிநோயாளிகளுக்கு மருத் துவம் பார்க்க வேண்டும் என்ற மருத்துவ துறையின் உத்தரவு இருந்தும், வேட் டைக்காரன்புதூர் மருத்துவமனையில் 3 மணிக்கு மேல் வரும் வெளிநோயாளி களுக்கு மருத்துவம் பார்ப்பதில்லை. தலைமை மருத்துவரும் மாலையில் வருவதில்லை என கூறுகின்றனர்

மேலும், அறுவை சிகிச்சை அரங்கு 16 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக் கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை செயல்பாடுக்கு வரவில்லை. சிசேரியன் மற்றும் எக்ஸ்ரே எடுப்பது, அடிபட்ட இடத்திற்கு தையல் போடுவது போன்ற நிலையில் நோயாளிகள் பொள் ளாச்சி அரசு தலைமை மருத்துவம னைக்கு பரிந்துரைக்கபடுகின்றனர். கோட்டூர், உடையகுளம் மற்றும் வேட் டைக்காரன்புதூர் ஆகிய மூன்று பேரூ ராட்சிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்கள் இல்லாத பகுதிகளிலிருந்து வரும் நோயாளிகள் என விரிந்த பகுதி களுக்கானதாக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வரு கிறது. மின்தடை ஏற்படும் சமயத்தில் மாற்றாக ஜெனரேட்டர் வசதியும் இங்கு இல்லை. இங்கு இருந்த ஜெனரேட்டர் 2016 ஆண்டு பணிபுரிந்த தலைமை மருத்துவர் பொள்ளாச்சி அரசு மருத்து வமனைக்கு கொடுத்து விட்டதாக கூறப் படுகிறது. மின்தடை சமயத்தில் நோயா ளிகளுக்கு உதவிட ஜெனரேட்டர் வசதி யினை ஏற்படுத்தி தரவேண்டும். நீண்டநாள் கோரிக்கையின் அடிப் படையில் ரூ.6 லட்சம் செலவில் உணவு கூடம் இம்மருத்துவமனையில் அமைக் கப்பட்டது.

ஆனால், இதுவரை செயல் படவில்லை. டாப்சிலிப், கோழிகமுத்தி, எருமைபாறை, சர்க்கார்பதி உள்ளிட்ட காடுகளில் வசிக்கும் சாமானிய, பழங் குடி மக்கள் உள்நோயாளிகளாக மருத் துவமனைக்கு வரும்போது அவர்க ளுக்கு வீடுகளிலிருந்தும் உணவு கொண்டு வரமுடியாது. பணம் கொடுத் தும் வாங்கி சாப்பிட முடியாத நிலையில் வரும் மக்களுக்கு உதவும் முறையில் உணவு கூடம் செயல்பட வேண்டும். தற் போது மருந்து கட்டும் இடத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (ஆரோ வாட்டர்) நோயாளிகள் இருக்கும் பகு தியில் வைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர். தொடர்ச்சியாக மருத்துவமனையின் தற்போதைய அவல நிலையை சுட்டிகாட்டி சீரமைக்க  பலமுறை மனு அளித்தும், இதுவரை சரி செய்யபடவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வேட் டைக்காரன்புதூர் அரசு மருத்துவம னையை மேம்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஆனைமலை தாலுகாச் செயலாளர் வி.எஸ்.பரமசிவம் கேட்டுக்கொண்டார்.