districts

img

கோவிலில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம்

நாமக்கல், ஆக.16- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் வகையில் தானி யங்கி மஞ்சப்பை இயந்திரம் அமைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு வரும் பொதுமக்கள், பூமாலை உள்ளிட்டவைகளை பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு வந்து அப்படியே வீசிச்செல்வதால், மலையின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, இனிமேல் கோவிலுக்குள்  துணிப்பையைத் தவிர வேறு பைகளை பயன்படுத் தக்கூடாது என அறிவிப்பு வெளியிட்ட கோவில் நிர்வாகம், வெளியூர்களில் இருந்து வரும் பொது மக்களுக்கு துணிப்பை வழங்கும் வகையில் கோவில் வாசலில் தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரத்தை வைத்துள்ளனர்.தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை  சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த எந்திரத்தில், 5 ரூபாய் நாண யங்கள் அல்லது ஒரு 10 ரூபாய் நாணயத்தை செலுத்தி னால், ஒரு மஞ்சப்பை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.