districts

img

மார்ச் 28, 29 ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் ஆட்டோ தொழிலாளர்கள் ஆயத்தக் கூட்டம்

சேலம், மார்ச் 7- மார்ச் 28, 29 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகர மாக்க சேலத்தில் ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடை பெறும் அகில இந்திய பொது வேலைநிறுத் தத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆயத்த கூட்டம் சிஐடியு சேலம் மாவட்ட  ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். இதில், பொது வேலை நிறுத்தத் தில் ஆட்டோ தொழிலாளர்களை முழுமை யாக பங்கேற்க செய்து, வேலை நிறுத் தத்தை வெற்றிகரமாக்குவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் உதயகுமார், பொருளாளர் மகா தேவன் உள்ளிட்ட ஆட்டோ சங்க நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர்.