வாகன உரிமத்தை புதுப்பிக்க இடை தரகர்களை அணுக வலியுறுத்துவது, புதிய விதிகளின்படி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஓட்ட 60 ரூபாய்க்கு பதிலாக 700 ரூபாய் வரை கேட்பது என முறைகேடுகளில் ஈடுபடும் நிர்வாகத்தை கண்டித்து மதுராந்தகம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் (சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுரவத் தலைவர் கிருஷ்ணராஜ், வட்ட நிர்வாகிகள் ரமேஷ் இளங்கோவன் உள்ளிட்டோர் பேசினர்.