districts

img

யாரையும் சாதியின் பெயரால் ஒடுக்க முற்படுவது சகித்துக் கொள்ள முடியாது: கே.சுப்பராயன் எம்.பி.,

திருப்பூர், ஆக.30 –  ஒவ்வொரு குடிமகனை யும் சாதியின் பெயரால் ஒடுக்க  முற்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று  திருப்பூர் எம்.பி., கே.சுப்பரா யன் கூறினார். காங்கயம் அருகே நெய்க் காரன்பாளையத்தில் சாதி  ஆதிக்க கும்பலால் சேதப்ப டுத்தப்பட்ட தொழிலாளியின் வீட்டை திருப்பூர் எம்.பி,. கே. சுப்பராயன் புதன்கிழமை பார் வையிட்டார். பாதிக்கப்பட்டவ ரிடம் விபரங்களைக் கேட்டறிந்தார்.  இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், ஒவ் வொரு குடிமகனையும் சாதியின் பெயரால்,  ஏற்றத் தாழ்வுகளின் பெயரால் ஒடுக்க முற்படு வது சட்ட விரோதமானது, ஜனநாயக விரோத மானது. சகித்துக் கொள்ள முடியாதது. இதில்  பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நியாயம் வாங்கித் தர நடவடிக்கை மேற்கொள்ளப் படும், என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காங்க யம் தாலுகா செயலாளர் பொன்னுசாமி, தற் சார்பு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன், புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் ப.கண்ணுசாமி, கவி,  பெரியாரின் பெண்கள் இயக்கப் பொறுப்பா ளர் ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்த னர்.