பொள்ளாச்சி, பிப்.2- லாரி மற்றும் இருசக்கர வாக னத்தில் ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்ட னர். பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளர் கோபிநாத் மற்றும் உதவி ஆய்வாளர் பாரத் நேரு குழு வினர் செவ்வாயன்று ஆனைமலை செமனாம்பதி முதலமடை சாலை யில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது, சாலையோரத்தில் 50 கிலோ எடை யில் 21 மூட்டைகளில் 1050 கிலோ ரேசன் அரிசி மறைத்து வைக்கப் பட்டிருந்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வேட்டைக் காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த முச் துச்சாமி மகன் மணிகண்டன் என்ப வரை கைது செய்தனர். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை யில், அந்த அரிசியை கேரள மாநி லம், பாலக்காடு அருகே கள்ளச் சந்தையில் விற்பதற்காக சேகரித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தப்பட இருந்த ரேசன் அரிசி மற்றும் இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்தனர். 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் சேலம் மாவட்டம், கொங்கணா புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் ரேசன்அரிசி கடத்தப்படு வதாக கிடைத்த தகவலின்படி கொங்கணாபுரம் காவல்துறையி னர் மூலப்பாதை பகுதியில் புத னன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழி யாக வந்த லாரியை நிறுத்தி சோத னையிட்ட போது 5 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும், இந்த அரிசி ஓமலூர் முத்து நாயக்கன்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கோழிப்பண்ணைக்கு கடத்திச் செல் வது தெரியவந்தது. இதனையடுத்து லாரி ஓட்டு நரான சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 5 டன் ரேசன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கொங்கணாபுரம் காவல்துறையி னர் மேலும் விசாரணை நடத்தி வரு கின்றனர்.