districts

img

ஆட்சியரகப் பொருட்களை ஜப்தி செய்ய முயற்சி

சேலம், செப்.2- சேலம் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றதால், பர பரப்பு ஏற்பட்டது. கடந்த 1977 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டத்திற்குட்பட்ட கூட்டப்பள்ளி காலனி, கொல் லப்பட்டி காலனி, தாஜ் நகர், எஸ்பிபி காலனி ஆகிய பகுதிக ளில் வீட்டு வசதித்துறை மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டது. அதாவது, வீட்டு வசதித்துறைக்கு நூற் றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது நிலத்தை அளித்தனர். அப்போது ஒரு சதுர அடிக்கு 37 பைசா வழங்கப்பட்டது. இந்தத் தொகை போதாது என்று 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், நிலத்திற்கு கூடுதலாக பணம் வழங்க வேண்டும் என சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசா ரித்த நீதிபதிகள், ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனால்,  இதுநாள் வரை அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை,  எனவே, அந்தத்தொகையை வழங்கக்கோரி மீண்டும் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், உரிய தொகை வழங்காததால் சேலம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சில பொருட்களை ஜப்தி  செய்ய உத்தரவிட்டனர். இதற்காக, மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், நீதிமன்ற அமீனா குழுக்க ளுடன் திங்களன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த னர். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக கூடுதல் நேர்முக உதவி யாளர் சின்னசாமியை சந்தித்து மனு அளித்து, விவரத்தை தெரி வித்தனர். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் அமீனா குழுக் களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இச்சம்பத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.