districts

img

இரட்டை ஆட்சி முறையை கொண்டு வர முயற்சி

திருப்பூர், மே 10 - தமிழகத்தில் நூறு ஆண்டு களுக்கு முன் நடைமுறையில் இருந்த இரட்டை ஆட்சி முறை யை ஆளுநர் கொண்டு வர முயற் சிக்கிறார். இதனை திமுக தொண் டர்கள் ஒருபோதும் அனுமதிக்க  மாட்டோம் என தமிழ்நாடு பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலை துறை  அமைச்சர் எ.வ.வேலு சவால் விடுத் தார். திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் திருப்பூரில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது: கடந்த 10 ஆண்டு கால அதிமுக  ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்க ளுக்காக திமுக ஆட்சியில் செய்து  வருகிறது. தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இரட்டை ஆட்சி முறையை தற் போது கொண்டு வர ஆளுநர் முயற்சிக்கிறார். திமுக மற்றும் கலைஞரின் உடன்பிறப்புகள் இருக்கும் வரை அதை அனு மதிக்க மாட்டோம். தாய் மொழி தமிழ் மற்றும் வர்த்தகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் ஆளுநர் முயற்சி செய்கிறார். ஆளுநர் மாளிகையில் மாண வர்கள், தொழிலதிபர்கள் என பல  தரப்பினரை அழைத்து ஆளுநர் அவரது கருத்துக்களை திணித்து வருகிறார். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் செயல்படும்ர்ஆளுநர், தமிழகத்தின் கருத்து, பண் பாட்டிற்கு  எதிராக திணிப்பு நடவ டிக்கையை மேற்கொள்கிறார்.  இத னாலேயே தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கு முரண்பாடு இருக் கிறதே தவிர, தனிப்பட்ட முறையில்  எந்த ஒரு காரணமும் இல்லை.  பெரியார் முதல் தற்போது உள்ள திமுக அரசு வரை விரும்பு வது சமூகநீதி. ஆனால் ஆளுநர் கொண்டு வர முயல்வது மநு தர்மம். திமுக இருக்கும் வரை இதை  அனுமதிக்காது என்றார்.  முன்னதாக, இந்த பொதுக் கூட் டத்தில் திமுக வடக்கு மாவட்ட செய லாளர், சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், வடக்கு மாநகரச் செய லாளர், மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.