சேலம், ஆக.17- திருநெல்வேலி நாங்குநேரியில், சாதிய வன்மத்தோடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம், நாங்கு நேரி பெருந்தெருவை சேர்ந்த பட்டிய லின மாணவர் சின்னத்துரை, அவரு டைய சகோதரி சந்திரா செல்வி ஆகி யோர் மீது ஆதிக்க சாதியை சேர்ந்த சக மாணவர்களே கொலைவெறி தாக் குதல் நடத்தினர். இத்தாக்குதலை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் சேலம் மாவட்டக்குழுத் தலைவர் ஆர்.குழந் தைவேலு தலைமை ஏற்றார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சேலம் மாவட்டப் பொருளாளர் வெற்றி வேல், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மேற்கு மாநகரச் செயலாளர் கனகராஜ், சேலம் வடக்கு மாநகரச் செய லாளர் என்.பிரவீன் குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சேலம் மாவட்டக் குழுச் செயலாளர் வீ.இளங்கோ ஆகி யோர் கண்டன உரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சேலம் மாவட் டக்குழு நிர்வாகி எஸ்.சண்முகம் நன்றி கூறினார். இதில் தீண்டா மை ஒழிப்பு முன் னணியினர் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.
கோவை
நாங்குநேரியில் நடைபெற்ற சாதி கொலைவெறி தாக்குதலை கண்டித்து கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதி மணி தலைமை வகித்தார். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் யு.கே.சிவ ஞானம், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் சுதா, தமுஎகச மாவட்டச் செய லாளர் அ.ர.கரீம், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட பலர் கலந்து கொண் டனர். இதேபோன்று, பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தீண் டாமை ஒழிப்பு முன்னணி, தபெதிக, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
ஈரோடு
இதேபோல், பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிவெறியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நசிய னூர் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ததீஒமு மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி தலைமை ஏற்றார். இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், ததீஒமு மாவட்டச் செயலாளர் மா. அண்ணாதுரை, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி,விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் கே.ஆர்.விஜயராகவன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வ நாதன், மாதர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பா.லலிதா, மாணவர் சங்க என். ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.