districts

img

கடன் பெற்ற விசைத்தறித் தொழிலாளி மீது தாக்குதல் தனியார் நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுத்திடுக – சிபிஎம்

ஈரோடு, அக்.2- தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற விசைத்தறி தொழிலாளி தாக்கப் பட்டு, பவானி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். தொழி லாளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம்  வலியுறுத்தி உள்ளது. ஈரோடு வட்டம், எலவமலை கிரா மம், வட்டக்கல்சேரியைச் சேர்ந்தவர்  பூங்கொடி. விவசாயத் தொழிலாளி யான இவரது கணவர் செல்லதுரை விசைத்தறி தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு ‘ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ என்னும் தனியார்  நிறுவனத்தினர், வீடு தேடி வந்து கடன்  வழங்குவதாகக்கூறினர். ‘ஜனா கிஷான்’ என்ற பிரிவில் மாடு வாங்க  பூங்கொடிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் ரூ.61 ஆயிரம் கடன்  கொடுத்தனர். ஆண்டுக்கு 24 விழுக்காடு  வட்டி என்ற விகிதத்தில் கடன் பெற்று,  மாடு வாங்கி வளர்த்து பால் உற்பத்தி செய்து வந்தார். 24 மாத தவணையில் மாதம் ரூ.3290 என்ற விகிதத்தில் திருப் பிச் செலுத்த வேண்டும். இதற்கு பிணை யாக காப்பீட்டு நிறுவனத்தில் சேவை வரியும் சேர்த்து ரூ.1439 காப்பீடு செய் யப்பட்டுள்ளது. இவ்வாறு ரூ.3 ஆயி ரத்து 300 வீதம் ஆறு மாதங்கள் கடன் தவணை செலுத்தப்பட்டது. அதன் பின் னர் கொரோனா பெருந்தொற்றால் ஊர டங்கு அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு பூங்கொடி - செல்ல துரையைத் தொடர்பு கொண்ட நிதி நிறு வனத்தினர், பூங்கொடி பெயரில் கொடுத்த மாட்டு கடனை செல்லதுரை பெயருக்கு மாற்றித் தருவதாகக் கூறி யுள்ளனர். ரூ.5 ஆயிரத்தைக் கையில்  கொடுத்து செல்லதுரை பெயரில் தனி  நபர் கடனாக ரூ.99 ஆயிரம் பெற்றதாக புது கணக்கு தொடங்கினர். மாதம் ரூ.4120 வீதம் 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை செலுத்த வேண் டும். அதன்படி மாதத் தவணையில் கட னைத் திருப்பி செலுத்தி வந்த நிலை யில், ஒரு மாதம் தவணை தவறி யதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சனியன்று இரவு 8.30 மணி யளவில், வீட்டிற்கு சென்ற நிதி நிறு வனத்தினர் தகாத வார்த்தைகளில் பேசி, செல்லதுரையைத் தாக்கியுள்ள னர். இதனால் நிலை தடுமாறி செல்ல துரை கீழே விழுந்தார். முகம், முதுகு ஆகிய பகுதிகளில் அடிபட்டுள்ளது.  இதையடுத்து பாதிக்கப்பட்ட செல்ல துரை பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சித்தோடு காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில், பாதிக்கப்பட்ட செல்ல துரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பா. லலிதா மற்றும் கலாமணி, இளங்கோ, முருகன் ஆகியோர் சந்தித்து நலம் விசா ரித்தனர். மேலும், தொழிலாளி மீது  தாக்குதல் நடத்திய நபர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும், என  மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர்.