districts

உண்மை கண்டறியும் குழுவின் மீது தாக்குதல்

கோயம்புத்தூர், ஜூன் 19– ஈஷா மின் தகன மேடையை பார்வையிட சென்ற உண்மை கண்ட றியும் குழுவினர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்  துள்ளனர்.

கோவை இக்கரை போளுவாம் பட்டி பகுதியில் ஈஷா யோகா மைய  வளாகத்தில், மின்தகன மேடை அமைக்கப்பட்டு வருகிறது. முறை கேடாக இந்த மின்  தகன மேடை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அதன் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்  செய்ய நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இந்நிலையில், பழங்குடியின மக்களுக்கு தானமாக வழங்கிய  இடத்தில் மின் மயானம் அமைக் கப்பட்டு வருவதாகவும்,மின் தகன மேடை அமைக்கும் விவகாரத்தில் உண்மை நிலவரம் குறித்து அறிய முற்போக்கு அமைப்புகள் சார்பில் உண்மை கண்டறியும் குழு ஜூன் 14 அன்று அந்த பகுதியை பார்வை யிடச் சென்றனர். அப்பொழுது அவர்  களை ஈஷா யோகா மையத்தை சேர்ந்த குண்டர்கள் தடுத்து நிறுத்தி  வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குத லில் ஈடுபட்டனர். உண்மை கண்டறி யும் குழுவினர் சென்ற வாகனத்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. 

இது தொடர்பாக தந்தை பெரி யார் திராவிடர் கழக பொதுச்செய லாளர் கு.ராமகிருட்டிணன், ஈஷா யோகா மையத்தின் தலைமை அதி காரி தினேஷ் ராஜா, வெங்கட் ராஜா,  நந்தகோபால் மற்றும் முள்ளங்காடு சசிகலா உள்ளிட்ட பலர் மீது எழுத்து பூர்வமாக புகார் அளித்திருந்தார். கு.ராமகிருட்டிணன் அளித்த புகாரை  பெற்றுக்கொண்ட கோவை ஆலந் துறை போலீசார், தாக்குதலில் ஈடு பட்ட குண்டர்களின் பெயர்கள் எது வும் குறிப்பிடாமல் ஈஷா யோகா மைய ஆட்கள் எனக் குறிப்பிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.