உடுமலை, செப்.5- மாணவ, மாணவியர்களுக்கான குறுவளமைய அளவி லான தடகளப் போட்டிகளை பொள்ளாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். உடுமலை பகுதியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக் கான குறுவளமைய அளவிலான தடகளப் போட்டிகள் வியாழ னன்று உடுமலை அரசு கலை கல்லூரியில், நடைபெற்றது. இப் போட்டிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி துவக்கி வைத்தார். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசகளை வழங்கினார். இதில், உடுமலை ஒன்றிய குழுத் தலைவர் மகாலட்சுமி, முருகன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரி யர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் உட னிருந்தனர்.