districts

img

அத்திக்கடவு அவிநாசி திட்டம்: தொலைபேசி எண்களுடன் அறிவிப்பு பலகை வைக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், ஆக.23 - அத்திக்கடவு அவிநாசி திட்டத் தில் பழுதுகள் ஏற்பட்டால் அதிகாரி களைத் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி எண்களுடன் ஆங் காங்கே அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என்று திருப்பூர்  மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப் பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்து ராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது.  இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  எஸ்.ஆர்.மதுசூதனன் பேசுகை யில், காய்கறிகளின் விலை கடுமை யாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இத னால், சின்ன வெங்காயம் உள்ளிட்ட  காய்கறிகளை விவசாயம் செய்தி ருந்த விவசாயிகளுக்கு கடுமை யான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காய்கறி விலையை கட்டுக்குள் கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். 

மலைவாழ் மக்களுக்கு மொச்சை விதை

உடுமலை மலைவாழ் மக்கள் இந்த ஆண்டு மொச்சக்கொட்டை விவசாயம் செய்ய உள்ளனர். எனவே வேளாண்துறை மூலம் மலைவாழ் மக்களுக்கு மொச்சை விதை வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். பெரும்பாலும் அரசு சார் பில் வழங்கப்படும் உரங்கள், தானி யங்கள் உள்ளிட்டவைகள் தரம் இல்லாதவைகளாக உள்ளன. எனவே தரமான வேளாண் பொருட் களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு  உட்பட்ட வேடபட்டி ஊராட்சிப் பகு தியில் அரசு ஊழியர் குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட் சம் மதிப்பில் தனிநபர் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழி யர்கள் இந்த திட்டத்தில் பயன டைய முடியாது என்ற சட்டம் உள்ள  நிலையில், இது எவ்வாறு நடந்தது.  இதுபோன்ற செயல்களால் ஏழை,  எளிய மக்கள் பயனடையாமலே போய் விடுகின்றனர். விதிமுறை களை மீறி செயல்பட்ட அதிகாரி கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். அதேபோல சில ஆற் றுப் படுகைகளில் கிரவல் மண் கலந் துள்ளது. அதை விவசாயிகள் எடுக் கும் போது அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். சாதாரண விவ சாயிகள் பயன்படுத்தும் வகையில் இந்த மண்ணை எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

தொலைபேசி எண்களுடன் தகவல் பலகை

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார்  பேசுகையில், அவிநாசி, ஊத்துக் குளி உள்ளிட்ட பகுதிகளில் விவசா யிகள் பயன்பெறும் வகையில் அவி நாசி, அத்திக்கடவு திட்டம் நிறை வேற்றப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது. இந்தத் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் பழுது ஏற்பட்டால் யாரை தொடர்பு  கொள்வது என்று விவசாயிகளுக்கு தெரிவதில்லை. ஆங்காங்கே தொலைபேசி எண்களோடு அறி விப்பு பலகைகள் வைக்க வேண் டும். சில நாட்களுக்கு முன்பு சேவூர்  பகுதியில் அவிநாசி அத்திக்க டவு திட்டத்திற்காக புதைக்கப்பட்ட  குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலை யில் சென்ற வாகன ஓட்டி விபத் திற்கு உள்ளாகி, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார். இதை மாவட்ட நிர் வாகம் கவனத்தில் கொள்ள வேண் டும். 100 நாள் வேலை வழங்குக ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட கம்மாலக்குட்டை ஊராட் சியில் அட்டை வைத்துள்ள 100 நாள்  வேலை திட்ட தொழிலாளர்களுக்கு  முறையாக வேலை வழங்கப்படுவ தில்லை என போராட்டம் நடத்தி னார்கள். இதையடுத்து 15 நபர்க ளுக்கு மட்டுமே வேலை வழங்கப் பட்டதாக கூறுகின்றனர். பலருக்கு வேலை வழங்கப்படவில்லை என  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏழை,  எளிய மக்களின் வாழ்வாதா ரத்தைக் கருத்தில் கொண்டு முறை யாக வேலை வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். அவிநாசி, சேவூர்  உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங் களை காட்றுப்பன்றிகள் சேதப்ப டுத்தியுள்ளது. ஆனால், வனத்து றையினர் இன்னும் சேதமாகி யுள்ள நிலத்தைப் பார்க்காமலே  உள்ளனர். எனவே உடனடியாக  வனத் துறையினர் காட்டுப்பன்றி களை விளைநிலங்களில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக்  கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வரும் நிலை யில், அரசுக்கு அவப்பெயர் ஏற்ப டுத்தும் வகையில் வாட்ஸ் அப்பில்  குறுஞ்செய்திகள் வருகிறது. அதை  கவனிக்க வேண்டும் என தெரிவித் தார். நாய்த்தொல்லை விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் அப்புசாமி பேசுகையில், அவிநாசி அத்திக்க டவு திட்டத்தில் பொங்குபாளை யம் ஊராட்சிக்குட்பட்ட பல குட் டைகள், குளங்கள் இணைக்கப்ப டாமல் உள்ளன. மாவட்ட நிர்வா கம் இதை கவனத்தில் கொண்டு இப் பகுதிகளை அவிநாசி அத்திக்க டவு திட்டத்தில் இணைப்பது தொடர்பாக முதல்வருக்கு பரிந்து ரைக்க வேண்டும். அதேபோல சில நாட்களுக்கு முன்பு பொங்குபாளையம் ஊராட்சி யில் 6க்கும் மேற்பட்ட ஆடுகளை தெருநாய்கள் கடித்துள்ளது. இத னால், விவசாயிக்கு ரூ. 75 ஆயிரம்  ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள் ளது. பாதிக்கப்பட்ட விவசாயிக ளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

உப்பாறு அணைக்கு உயிர் தண்ணீர்

இதை தொடர்ந்து விவசாயிகள் சிலர் பேசுகையில், தாராபுரம் வட் டம் உப்பாறு அணைக்கு உயிர்  தண்ணீர் வேண்டி பலமுறை கோரிக்கை வைத்து விட்டோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. இதனால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு அளிக்கத் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ லுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசூ ரில் இருந்து குழாய் பதித்தால் உப் பாறு அணைக்கு உயிர்நீர் வழங்க  முடியும். இது குறித்து அதிகாரி யிடம் கேட்டால் உச்ச நீதிமன்றத் தில் வழக்கு உள்ளதாக கூறுகின்ற னர். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சூரியம்பாளையம் பகு தியில் மருத்துவ கழிவுகளை எரிக் கும் தொழிற்சாலையில் சட்டவிரோ தமாக பணிகள் மேற்கொள்ளப்ப டுகிறது. அதை உடனடியாக தடுத்து  நிறுத்த வேண்டும். உப்பாறு - ராஜ வாய்க்கால் இடையே தடுப்பணை கள் கட்ட வேண்டும். பொங்கலூர் அருகே பிஏபி வாய்க்காலில் குப் பைகள் கொட்டப்படுவதால் அடைப்பு ஏற்படுகிறது. அதிகாரி கள் இது குறித்து உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றனர். இக்கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் க.கார்த்திகேயன், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) கிருஷ்ணவேணி, தாராபு ரம் வருவாய் கோட்டாட்சியர் செந் தில் அரசன், மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் (வே ளாண்மை) ஷிலா பூசாலட்சுமி, அம ராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை  இணைபதிவாளர் / செயல் ஆட்சி யர் மீனாஅருள், துணை ஆட்சி யர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதி நிதிகள் மற்றும் விவசாயிகள் பலர்  கலந்து கொண்டனர்.