districts

மக்களின் வரவேற்பை பெற்ற “ஆர்ட் ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி

கோவை, ஜன.6- கோயம்புத்தூர் விழா கொண் டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரேஸ்கோர்ஸில் நடைபெற்று வரும் ”ஆர்ட் ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி மக்க ளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள் ளது. கோவையின் பாரம்பரிய கலாச் சாரத்தை வெளிப்படுத்தும் வித மாக ஆண்டுதோறும் கோயம்புத் தூர் விழா கொண்டாடப்பட்டு வரு கிறது. இந்த ஆண்டு கோயம்புத் தூர் விழாவையொட்டி மாநக ரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகின்றன. அதன் ஒரு பகு தியாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகு தியில் கலைத்தெரு (Art street)  நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  இரண்டு நாட்கள் நடைபெறும்  இந்நிகழ்ச்சியை சனிக்கிழமை யன்று கோவை மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி மற்றும் கோவை  மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி  வைத்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அவர்களது கலைப் படைப்புகளை, கலைத்தெரு  நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தி யுள்ளனர்.  குறிப்பாக, மணல் ஓவியங் கள், புராண உருவங்களின் சுவரோ வியங்கள், ரெட்ரோ ஓவியங்கள், பிச்சுவாய் பெயிண்டிங், கேலிகி ராபி, 3டி மாடலிங், காமிக் ஸ்ட்ரிப், குரோச்செட், களிமண் கலை, மட் பாண்டங்கள், மூங்கில் கூடை போன்ற பல்வேறு வகையான கலை படைப்புகள், கிரியேட்டிவ் கேலிகிராபி, 3-டி மோல்ட்ஸ் மற்றும் குறிப்பிடத்தக்க தமிழ் எழுத் தாளர்களின் உருவப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளுக்கான ஓவியப் பயிற்சி பட்டறையும் நடத் தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத் ்துடன் கண்டு சென்றனர்.