கோவை, ஜூலை 22- கோவை விமான நிலையத்தில் ராஜஸ் தான் வாலிபர் ஒருவரிடம் துப்பாக்கி குண்டு கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய் தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதரா பாத் உள்ளிட்ட உள்நாடுகளுக்கும், ஷார்ஜா, துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. இங்கு வெள்ளியன்று வழக்கம்போல் விமானநிலைய அதிகாரி கள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, விஷ்டாரா ஏர்லைன்ஸ் பாது காப்பு மேற்பார்வையாளர் அருண்குமார் விமான நிலையம் வந்த பயணிகளின் உட மைகளை சோதனை மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தார். அப்போது அவரின் கைப்பையில் 2 கைத் துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டறி யப்பட்டது.
இது குறித்து அவரிடம் விசாரணை நடத்து கையில், தனது கைப்பையில் துப்பாக்கி குண்டுகள் எப்படி வந்தது என தெரியாது கூறப்படுகிறது. இதனையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர், விமான நிலையம் வந்த பீளமேடு போலீசாரிடம் ராஜஸ்தான் வாலிபரை ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒப்பந்த தொழில் செய்து வரும் ஷ்யாம் சிங்(42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீ சார் அவரிடம் கைத்துப்பாக்கி உள்ளதா? குண்டுகள் வைத்திருந்ததற்கான நோக்கம் என்ன? அவற்றுக்கு உரிய அனுமதி உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் பயணி யிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய் யப்பட்ட சம்பவம் விமான நிலைய வளா கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.