உடுமலை, ஜன.18- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள அமராவதி கூட் டுறவு சர்க்கரை ஆலையை அமைச்சர் ராஜேந்திரன் ஞாயிறன்று ஆய்வு செய்ய வருகிறார். அமைச்சரின் ஆய்வின் விளை வாக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி கிடைக் குமா என்று அவர்கள் எதிர்பார்ப்பில் உள்ள னர். அமராவதி சர்க்கரை ஆலை, தமிழ்நாட் டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகும். இந்த ஆலையை புனரமைக்கத் தேவை யான நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக் கீடு செய்து, இரண்டு ஆண்டுகள் மூடப்பட் டுள்ள ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சர்க்கரை மற்றும் கரும்பு அபிவிருத்தி துறை அமைச்சர் இராஜேந்திரன் இங்கு ஆய்வுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத்துக்குளம் தாலுகா செயலாளர் எம்.எம்.வீரப்பன் கூறுகையில், மடத்துக்கு ளம் தாலுகா கிருஷ்ணாபுரத்தில் 1960 ஆம் ஆண்டு இந்த சர்க்கரை ஆலை அமைக்கப் பட்டது. 1994 ஆம் ஆண்டு இந்த ஆலையின் கழிவுகளில் இருந்து எரிசாராயம் தயாரிக்கும் ஆலையும் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தொடர் பராமரிப்பு இல்லாமல், புதிய இயந்திரங்கள் பொருத்தி ஆலையை புதுப்பிக்காததாலும் கடந்த இரு ஆண்டுகளாக இந்த ஆலை மூடப்பட் டுள்ளது. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த ரூ.80 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், அமைச்சரின் இன்றைய ஆய்வு விவசாயிகளுக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும், என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மட்டு மின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் கடந்த இரு ஆண்டுகளாக, மாநில அரசின் அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சரிடம் தொடர்ச்சியாக ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்க கோரிக்கை வைத்து வந்தது. இதன் தொடர்ச்சியாக சர்க்கரை ஆலையை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்ய வருவதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் விவசாயி களின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும் வகை யில் உடனடியாக அமராவதி சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த நிதி ஒதுக்கி, புன ரமைத்து இயக்கினால் தான் விவசாயிக ளுக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என்றும் கரும்பு விவசாயிகள் கூறுகின்றனர்.