districts

img

அமராவதி சக்கரை ஆலையில் மார்ச் 2 ஆவது வாரத்தில் அரவை: பராமரிப்புப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை

திருப்பூர், பிப்.24- மார்ச் 2 ஆவது வாரம் அரவை  துவங்க உள்ள நிலையில், டிசம்பர் மாதமே துவங்கப்பட்டிருக்க வேண் டிய அமராவதி சர்க்கரை ஆலை பரா மரிப்புப் பணிகள் இன்னும் தொடங் கப்படாமல் உள்ளது கவலை அளிப்ப தாக கரும்பு விவசாயிகள் தெரிவிக் கின்றனர். இதுகுறித்து கரும்பு விவசாயி கள் சங்கத் தலைவர் பால தண்ட பாணி கூறியதாவது, 2023 – 2024 ஆண்டு அமராவதி சர்க்கரை ஆலை யில் அரவைக்கு 1500 ஏக்கர் கரும்பு  சாகுபடி பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 6 ஆயிரம் டன் கரும்பு அர வைக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. வரும் மார்ச் இரண்டாம் வாரம்  அரவை தொடங்க உள்ளது. கடந்த  டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நிரந்தரப் பணியாளர்கள் இல் லாத ஊழியர்கள், அதாவது பருவ கால ஊழியர்களை பயன்படுத்தி முழு ஆலையையும் பராமரிப்பு செய் திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு பராமரிப்பு பணிகள் இன்னும்  தொடங்கப்படவில்லை. மாநில அரசு வழிவகை கடனாக ரூ.6  கோடியே 75 லட்சம் ஒதுக்கியுள்ளது. இது பராமரிப்புப் பணிகளுக்கு போதாது. பிரதான எந்திர பகுதிகள்  (கனையம்), கரும்பு அரைக்கும் இடம், கரும்பு எடுத்துச் செல்லக் கூடிய கன்வேயர், கரும்பு பதப் படுத்தும் பாயிலர்கள் மற்றும் இதர பகுதிகளை கொண்டு செல்லும் குழாய்கள், உற்பத்தி துறையில் இருக்கக்கூடிய சர்க்கரை அரவை  இயந்திரங்கள் உட்பட அனைத்து பாகங்களையும் பராமரிப்பு மேற் கொள்ள சுமார் 50 கோடி ரூபாய் வரை தேவைப்படும். இந்நிலையில், தமிழக அரசு இந்த ஆண்டு நிதி நிலையில் அமராவதி ஆலை பரா மரிப்புக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம்  அளிக்கிறது. இதனால், இந்த ஆண்டு  ஆலை இயங்குமா என்பதே சந்தேக மாக உள்ளது. மோகனூர் சக்கரை ஆலைக்கு 15 ஆயிரம் டன் கரும்பு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் நடை பெற்று வருவதாக தெரியவருகிறது. அமராவதி சக்கரை ஆலையில் கடந்த ஆண்டு அரவையில் சிக்கல்  ஏற்பட்டது. இதனால் ஆலைக்கு மூன்று கோடி வரை இழப்பு ஏற்பட் டது. இந்த ஆண்டு அமராவதி ஆலை  புனரமைக்க நிதி ஒதுக்காதது கரும்பு  விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. கரும்பு ஊக்கத்  தொகையும் வெறும் ரூ.20 மட்டுமே  ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிக குறை வாக உள்ளதாக விவசாயிகள் கருது கின்றனர். ஒன்றிய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களை பாது காக்கும் வகையில், இந்த மாவட்டத் தில் இருக்கக்கூடிய அமராவதி ஆலைக்கு போதுமான நிதி ஒதுக்கி,  கரும்புக்கு உரிய விலை அளிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய  அரசு  சர்க்கரையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. அதற்கு பதிலாக உள்நாட்டில் இருக்கக்கூடிய கரும்பு விவசாயி களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் கரும்புக்கு உரிய விலை  நிர்ணயிக்க வேண்டும் என்றார்.