districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சத்து மாத்திரை சாப்பிட்ட ஒருவர் பலி

உதகை, மார்ச் 10- உதகை நகராட்சி பள்ளியில் போட்டி போட்டுக்கொண்டு அதிக சத்து மாத்திரை உட்கொண்ட 4 மாணவிகளில், ஒரு மாணவி  பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், உதகை  காந்தல்  பகுதி யில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு சொந்த மான உருது நடுநிலைப்பள்ளியில், சுகாதாரத் துறை மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  இரும்பு மற்றும் ‘போலிக்’ சத்து  மாத்திரை வாரம் ஒருமுறை மதியம் சாப்பிட்ட பின் அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங் கப்படுகிறது. இந்நிலையில், நகராட்சி உருது  பள்ளிக்கு சத்து மாத்திரை வழங்கப்பட்டது. அப்போது யார் அதிகமாக ஊட்டச்சத்து  மாத்திரை உட்கொள்வது என மாணவ, மாணவிகள் இடையே போட்டி ஏற்பட்டு  அதிக மாத்திரை சாப்பிட்டு உள்ளனர். இதில், 4 மாணவிகள் மயக்கமடைந்தனர். இதைத்தொடர்ந்து,  மாணவ- மாணவி களை மீட்டு உதகை அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மாணவிகள் உடல்நிலை மோசமானதால் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக ஆம்பு லன்ஸ்கள் மூலம் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில், உதகையை சேர்ந்த சலீம் என்ப வரது மகள் ஜெய்பா பாத்திமா என்ற மாணவி யின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட தால், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட  நிலையில், சேலம் அருகில் பரிதாபமாக அவர்  உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மாணவி யின் உடல் உதகைக்கு கொண்டுவரப் பட்டது. இந்த சம்பவம் அவரது உறவினர்கள்  மற்றும் பள்ளி மாணவர்கள் இடையே கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உதகை மேற்கு காவல் ஆய்வாளர் மீனா பிரியா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். சுகாதார பணிகள் துணை இயக்குநர்  பாலுசாமி கூறுகையில், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒரு முறை  மதியம் சாப்பிட்டபின் அதற்காக நியமிக்கப் பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாண வர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வளவு மாத்திரை மொத்தமாக மாணவி களுக்கு எவ்வாறு கிடைத்தது என்று தெரிய வில்லை. இதுகுறித்து கல்வித்துறை அதி காரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றார். இந்நிலையில், நகராட்சி பள்ளி தலைமை  ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை விநியோ கிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலை வாணி ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம்  செய்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.   மாத்திரைகள் சாப்பிட்டு உயிரிழந்த மாணவி ஜெய்பா பாத்திமாவின் தாயார் அஷ்மா, மாணவி படித்த அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேசன் பணியாளர்களுக்கு சிறப்புத் திட்ட  பணப்பயன்களை உடனே வழங்க கோரிக்கை

திருப்பூர், மார்ச் 10 - நியாய விலைக் கடை பணியாளருக்கு நிலுவையில் உள்ள  சிறப்புத் திட்டத்திற்கான பணப் பயன்களை உடனடியாக வழங்க சிஐடியு கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் (சிஐடியு)  நிர்வாகக்குழு கூட்டம் வெள்ளியன்று சங்க மாவட்ட  தலைவர் பி.கௌதமன் தலைமையில் சிஐடியு மாவட்ட அலு வலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குடும்ப அட்டை தாரர் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப் பது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும், நியாய விலைக் கடை பணி யாளருக்கு நிலுவையில் உள்ள சிறப்புத் திட்டத்திற்கான  பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என் பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.மகேந்திரன்,  மாவட்ட பொருளாளர் பி.சுரேஷ்,  துணைத் செயலாளர் கே. எம்.சரவணமூர்த்தி, துணைத் தலைவர் வி. கருப்புசாமி மற்றும்  நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவக்குமார், வேலுச்சாமி, ரங்க சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பீகார் நாளிதழ்களில் பொய் செய்தி திருப்பூர் காவல் துறை மறுப்பு

திருப்பூர், மார்ச் 10 – பீகார் நாளிதழ்களில் அந்த மாநிலத்தின் மதுபானியைச் சேர்ந்த இளைஞர் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட தாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதற்கு திருப்பூர் மாவட்ட காவல் துறை மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த தற்கொலை செய்தியை, படுகொலை என்று பொய் யாக செய்தியைப் பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானி யைச் சேர்ந்த ஷம்பு முகையா திருப்பூரில் வேலை பார்த்து வந் தார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம்  செய்து இங்கு வசித்து வந்தார். அவரது தங்கையின் திரும ணம் நின்றுவிட்டதால் ஷம்பு முகையா வருத்தத்தில் இருந் தார். கடந்த மார்ச் 5ஆம் தேதி தனது வீட்டின் குளியலறைக்கு  அருகில் தனது கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலை  செய்து கொண்டார். அவரது மனைவி சரண்யாதான் அவரது சடலத்தை முதலில் பார்த்தார்.  எனவே மீன் வாங்கும்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப் பட்டு ஷம்பு கொல்லப்பட்டதாக செய்தியில் கூறியிருப்பது முற்றிலும் தவறானது. ஷம்புவின் கை நரம்பு அறுக்கப் பட்டு உயிரிழந்த அவரது சடலம் வீட்டின் குளியலறை அருகி லேயே கண்டெடுக்கப்பட்டது. எனவே பொய்யான செய்தி யைப் பரப்பிய நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  என்று மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

தேர்க்கடை மற்றும் வாரச்சந்தை ஏலம் அறிவிப்பு

தேர்க்கடை மற்றும் வாரச்சந்தை ஏலம் அறிவிப்பு அவிநாசி, மார்ச் 10- அவிநாசி அருகே கருவலூர் ஊராட்சி தேர்க்கடை மற்றும்  வாரச்சந்தை ஏலம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள் ளது. அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் வருடந்  தோறும் தேர்க்கடை மற்றும் வாரச்சந்தை ஏலம் விடுவது வழக் கமாக உள்ளது. இந்நிலையில் 2023 முதல் 2024 வரை காண  ஓராண்டுக்கான ஏலம் மார்ச் 13 ஆம் தேதியில் காலை 11  மணியளவில் கருவலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடை பெறுகிறது. இந்த ஏலம் நிபந்தனைகளுக்குட்பட்டு ஊராட்சி  மன்ற தலைவரால் நடைபெறுகிறது. ஏலம் கோருபவர்கள்  ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். மேலும்  ஏலம் எடுப்பவர்கள் நெகிழி பைகளை பயன்படுத்த கூடாது.  மீறினால் ஏலம் உரிமை ரத்து செய்யப்படும் என அறிவிப்பு  வெளியிட்டுள்ளனர்.

மகளிர் தினம் கொண்டாட்டம்

திருப்பூர், மார்ச் 10 - சேவ் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக மகளிர் தின  விழா திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள கேஎஸ்ஆர் மண்டபத் தில் புதனன்று நடைபெற்றது. இதில் சேவ் கள ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி வரவேற் றார். சேவ், நிர்வாக இயக்குநர் ஏ.அலோசியஸ் தலைமை  தாங்கினார். பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடடைய வேண்டும், பெண்கள் தாமாக முன்வந்து அதற்கான வாய்ப்பு களை உருவாக்க வேண்டும் என்றார்.  ஏஐடியுசி மகளிர் தினம்  சர்வதேச உழைக்கும் மகளிர் தின விழா புதனன்று கொண் டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு  உட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் ஏஐடியுசி உழைக்கும் மகளிர் அமைப்பு சார்பாக கோரிக்கை பதாகை களை ஏந்தி முழக்கமிட்டு மகளிர் தின விழா கொண்டாடினர்.   இதில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,  சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், அமைப்பு  சாரா கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு ஓய்வூ தியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன.

கட்டட மதிப்பீட்டு அறிக்கை வழங்க லஞ்சம் உதவி செயற்பொறியாளர், உதவியாளர் கைது

திருப்பூர், மார்ச் 10 – திருப்பூரில் கட்டட மதிப்பீட்டு அறிக்கை வழங்க ரூ.75 ஆயிரம் லஞ்சம்  கேட்டது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த உதவி செயற்பொறியாளர் மற் றும் அவரது உதவியாளர் இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது  செய்தனர். திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (42). இவர்  சில மாதங்களுக்கு முன்பு கட்டிடம் ஒன்றை வாங்கியிருக்கிறார். திருப்பூர் நெருப்பெரிச்சல் பத்திரப்பதிவு ஜாயின்ட்–2 அலுவலகத்தில் மேற் கொண்டார். கட்டடத்தின் மதிப்பீட்டு அறிக்கை அளிக்க, களப்பணிக்காக மது ரையில் உள்ள பத்திரப்பதிவு துறை  டி.ஐ.ஜி., அலுவலகத்துக்கு பரிந் துரை செய்தனர். கடந்த ஜனவரி மாதம்,  மதுரையில் உள்ள உதவி செயற் பொறியாளர் (கட்டடம்) ராமமூர்த்தி திருப்பூரில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை கள ஆய்வு மேற்கொண்டு சென்றார். இந்த மதிப்பீட்டு அறிக்கை அளிக்க கோபாலகிருஷ்ணனிடம், ரூ.75 ஆயிரம்  தருமாறு வற்புறுத்தினார்.இதுகுறித்து அவர் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, செயற்பொறியாளர் ராம மூர்த்தி, உதவியாளர் குமார் ஆகி யோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். குமாரை வியாழக்கிழமை கைது செய் தனர். அத்துடன் உதவி செயற்பொறி யாளர் ராமமூர்த்தியை வெள்ளியன்று கைது செய்தனர்.

கல்குவாரி ஆதரவாளர்கள் தொடர் இடையூறு திருப்பூரில் கருத்து கேட்புக்கூட்டம் ரத்து

திருப்பூர், மார்ச் 10 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் வெள்ளியன்று கோடங்கிபா ளையம் பகுதி கல்குவாரிகள் குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்  கல்குவாரி ஆதரவாளர்களின் தொடர்  இடையூறு காரணமாக பதற்றத்தை தணிக்கும் வகையில் ரத்து செய்யப் பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளியன்று காலை 10 மணிக்கு 5  கல்குவாரிகளுக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் அறிவிக்கப்பட்டு தொடங்கி நடைபெற்றது. இந்நிலை யில் கல்குவாரிக்கு எதிர்ப்பாக பொது மக்கள், சமூக செயல்பாட்டாளர்கள், சுற் றுச்சூழல் பாதிப்பு குறித்தும், கல்குவாரி  புலத்திலே உள்ள மறைக்கப்பட்ட உண் மைகள் குறித்தும் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினர். அப்போது கல்குவாரி உரி மையாளர்கள் தரப்பினர் குறுக்கிட்டு, யாரையும் பேசக்கூடாது, வெளியூரில் இருந்து வந்து பேசக்கூடாது என்று கூறி கருத்துக் கூற விடாமல் தடுத்த னர்.  உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, கருத்துக்கள் கூறுவதை அனுமதித்தார். குறுக்கிட்டவர்களை அமைதி காக்க உத்தரவிட்டார். ஆனால்  தொடர்ந்து சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆதாரப்பூர்வமான கருத்துக் களை கூறுவதற்கு அவர்கள் அனும திக்காமல் குறுக்கிட்டுக் கொண்டே இருந்தனர். அத்துடன் எதிர்த்து கருத்து தெரி வித்தவர்கள் அருகில் சென்று தனிப் பட்ட முறையிலும் அவர்களை இடை யூறு செய்தனர். இதையடுத்து மாவட்ட  ஆட்சியர், இந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலையில் இல்லை என்று தெரிவித்து உடனடியாக இந்த கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவ லர்கள் அங்கிருந்து வெளியேறினர். அதன் பிறகு கல்குவாரி உரிமை யாளர்கள் தரப்பினர், எதிர்க்கருத்து தெரிவித்தவர்களை சூழ்ந்து கொண்டு தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று இக்கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வற்பு றுத்தி உள்ளனர்.

பொதுத்தேர்வு ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர், மார்ச் 10 – மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முன் னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் திருப் பூரில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கண் காணிப்பு அலுவலர் மற்றும்  தமிழ்நாடு பாடநூல் கல்வி யியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் ஆர்.கெஜலட்சுமி தலை மையில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் முன்னிலையில் வெள்ளியன்று ஆட்சியர கத்தில் நடைபெற்றது. இதில்  மேல்நிலை பொதுத் தேர்வு  மையங்களில் பணியாற்ற  முதன்மைக் கண்காணிப்பா ளர்கள், தலைமை ஆசிரியர் களும், துறை அலுவலர்க ளும், அறைக் கண்காணிப்பா ளர்களாகப் பணியாற்ற ஆசி ரியர்களுடன் பொதுத்தேர் வின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது.

சாக்கடை கட்ட குழிதோண்டிய இடத்தில் சுவர் இடிந்து விழுந்து மாணவர் பலி

திருப்பூர், மார்ச் 10 – திருப்பூர் மாநகராட்சியில் சாக்கடை கட்டுவதற்காக குழி தோண்டப்பட்ட இடத்தில் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்து  விழுந்ததில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். திருப்பூர் முதலாம் மண்டலத்திற்கு உட்பட்ட அருள்ஜோ திபுரம் பகுதியில் சாக்கடை கட்டும் பணி நடந்து வருகி றது. சாக்கடை கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு உள்ளது.  இந்நிலையில் சாலைக்கும், வீட்டிற்கும் நடுவே சாக்கடை கட்ட  தோண்டிய குழியின் இடைவெளியை கடக்க அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் அபிராம்,  மரப்பலகையை போட முற்பட்டார். அப்போது பலமிழந்து இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அபிராம் மீது விழுந்தது.  இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அபிராம் பரிதாப மாக உயிரிழந்தார்.  இதனையடுத்து அருகிலிருந்தவரக்ள் உட னடியாக சுவர் இடிபாடுகளை அப்புறபடுத்தி மாணவன் உடலை மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி காட்சி களை அடிப்படையாக வைத்து சம்பவம் குறித்து விசாரணை  செய்து வருகின்றனர். உயிரிழறந்த மாணவனின் தந்தை கடந்த பத்து நாட்க ளுக்கு முன்புதான் இறந்தார் என்றும், தற்போது மாணவ னும் சுவர் இடிந்து விழுந்து இறந்திருப்பது பெரும் சோகத்தை  ஏற்படுத்தி இருப்பதாக அப்பகுதி சுற்றுவட்டாரத்தினர் கூறி னர்.

நிலக்கடலை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தாராபுரம், மார்ச் 10 - தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத் துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத் தின் கீழ் எண்ணெய்வித்து பயிரான நிலக்கடலை சாகுபடி  குறித்து தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட் டது. தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூர் கிராமத்தில் விவ சாயிகளுக்கு இந்த தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட் டது. நிகழ்ச்சிக்கு துணை வேளாண்மை அலுவலர் டி.சின்ன தம்பி தலைமை வகித்தார். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத் தின் ஆலோசகர் அரசப்பன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து கூறுகையில், திட்டத்தின் நோக்கத்தையும், எண் ணெய் வித்து பயிர்களுள் முக்கிய பயிரான நிலக்கடலை சாகு படி தொழில் நுட்பங்களை பற்றியும் கூறினார். நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள், கோடை உழ வின் முக்கியத்துவம், வேர் அழுகல் நோயைக் கட்டுப்ப டுத்த டிரைக்கோடெர்மா விரிடி விதைநேர்த்தி செய்தல், தழை  மற்றும் மணிச்சத்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்க உயிர் உரங்களான ரைசோபியம் மற்றம் பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதைநேர்த்தி செய்தல், திரவ உயிர் உரங்களை  சொட்டு நீர் பாசனத்தில் பயன்படுத்துதல், பயிர் எண்ணிக்கை  பராமரிக்க வரிசை விதைப்பு மற்றும் விதையிடும் கருவி  மூலம் விதைப்பு செய்தல், நுண்ணூட்டமிடுதல், ஊட்டமேற் றிய தொழு உரம் தயாரித்து இடுதல், ஒருங்கிணைந்த நோய்  மற்றும் பூச்சி மேலாண்மை பற்றிய தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். பின்னர் துணை வேளாண்மை அலுவலர் டி.சின்னதம்பி  உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் பற்றியும் வட் டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள் மற் றும் மானிய விபரங்கள் பற்றியும் விரிவாக விளக்கி கூறினார்.  நிகழ்ச்சியில் தாராபுரம் வட்டார துணை வேளாண்மை அலு வலர், உதவி வோளண்மை அலுவலர், அட்மா தொழில்நுட்ப  மேலாளர் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.   நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாராபுரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள் செய்திருந்த னர்.