ஈரோடு, ஜுலை 27- ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி கோப்பை அறிமுக விழா புஞ்சை புளியம்பட்டி, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 7ஆவது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2023- ஆம் ஆண்டின் கோப்பை அறிமுக விழா மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடை பெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் பேசும்போது, இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் ஆசியக் கோப்பைக்கான ஆண்கள் ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா நாடுகளை சேர்ந்த ஹாக்கி அணிகள் பங்கு பெறுகிறது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு வழங் கப்படும் பரிசுக்கோப்பை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் தோறும் எடுத்துச் சென்று பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழனன்று ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோப்பை அறிமுக விழா நடைபெறுகிறது. மாணவர்கள் படிப்பதுடன் விளையாட்டிலும் கவனம் செலுத்தினால் உடலும் ஆரோக்கியம் பெறும். போட்டிகளில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்கள் நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் மற்றும் இந்தியாவிற்கும் பெருமை தேடி தர வேண்டுமெனவும் தெரிவித்தார். முன்னதாக, புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவல கத்தில் துவங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய சாலைகளின் வழியாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வந்த டைந்தது. உதவி காவல் கண்காணிப்பாளர் அய்மன்ஜமால், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சதீஷ் குமார், சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் சங்கர் கணேஷ், நகராட்சித் தலைவர் ஜனார்தனன், துணைத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.