நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் விளம்பர பேனர்கள், சுவ ரொட்டிகள், கொடி கம்பங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கொடிக்கம்பங்களை அரசியல் கட்சி களை சேர்ந்தவர்களே அகற்றி வரு கின்றனர். பள்ளிபாளையம் வட்டாரப் பகுதி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர், சுவரொட்டிகள் அகற்றி, அர சியல் கட்சிகளின் எழுத்துக்களை மறைக்க வெள்ளை அடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின் றனர்.